வட மாகாண சபை அமர்விலிருந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு
வட மாகாண சபையின் அமர்வு இன்று நடைபெற்ற போது, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் 6 பேர் வெளிநடப்பு செய்துள்ளனர்.
ஆளுங்கட்சி உறுப்பினர் எம் சிவாஜிலிங்கம் சமர்ப்பித்த 3 பிரேரணைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்ததாக எமது செய்தியாளர் குறிப்பிடுகின்றார்.
சர்வதேச விசாரணைக்கான கால வரையறையை நீடித்தல் உள்ளிட்ட சில விடயங்கள் தொடர்பில் இந்த 03 பிரேரணைகள் எம் சிவாஜிலிங்கத்தினால் இன்றைய அமர்வில் சமர்ப்பிக்கப்பட்டிருந்ததாக எமது செய்தியாளர் கூறினார்.
வட மாகாண சபை அமர்விலிருந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு
Reviewed by NEWMANNAR
on
August 21, 2014
Rating:

No comments:
Post a Comment