மன்னார் பேசாலை பங்குத்தந்தை அருட்தந்தை அவிதப்பர் காலமானார்.-Photos
மன்னார் பேசாலை பங்குத்தந்தை அருட்தந்தை சவரி விக்டன் அவிதப்பர் நேற்று(22) திங்கட்கிழமை மாலை கண்டி வைத்தியசாலையில் காலமானார்.
திடீர் சுகவீனம் காரணமாக கண்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அருட்தந்தை நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தற்போது அருட்தந்தையின் பூதவுடல் மன்னார் ஆயர் இல்லத்தில் மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளதாக மன்னார் ஆயர் இல்லம் தெரிவித்துள்ளது.
அஞ்சலி நிகழ்வுகள் தொடர்பில் பின்னார் அறிவிக்கப்படும் என ஆயர் இல்லம் தெரிவித்துள்ளது.
மன்னார் பேசாலை பங்குத்தந்தை அருட்தந்தை அவிதப்பர் காலமானார்.-Photos
Reviewed by NEWMANNAR
on
June 23, 2015
Rating:

No comments:
Post a Comment