அண்மைய செய்திகள்

recent
-

புதுடில்லிக்கு பயணமானது தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு, இந்­திய தலை­நகர் புது­டில்­லிக்கு உத்­தி­யோ­க­பூர்வ விஜ­ய­மொன்றை மேற்­கொண்டு இன்று பிற்பகல் 2.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து யுஎல்195 விமானத்தின் மூலம் பய­ண­மானது. 

 இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பில், தமிழ்த் ­தே­சியக் கூட்­ட­மைப்பின் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான இரா.சம்­பந்தன் தலை­மையில் கூட்­ட­மைப்பின் ஊட­கப் ­பேச்­சா­ளரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான சுரேஷ்­ பி­ரே­மச்­சந்­திரன், ரெலோ தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான செல்வம் அடைக்­க­ல­நாதன் மற்றும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான எம்.ஏ.சுமந்­திரன், பொன்.செல்­வ­ராஜா மற்றும் சுபாஸ் சந்திரன் ஆகி­யோ­ர­டங்­கிய அறுவர் கொண்ட உயர்­ மட்டக்குழுவே பய­ண­ மேற்கொண்டுள்ளது. 

 புது­டில்லி செல்லும் இவ்­வுயர் மட்­டக்­கு­ழு­வா­னது நாளை வெள்ளிக்­கி­ழமை இந்­திய வெளிவி­வ­கார அமைச்சர் சுஷ்­மா­சு­வ­ராஜை சந்­திக்­க­வுள்­ளது. மறுநாள் சனிக்­கி­ழ­மை­யன்று இந்­தி­யாவின் புதிய பிர­த­ம­ராக பத­வி­யேற்­றுள்ள நரேந்­திர மோடி­யுடன் கூட்­ட­மைப்பு முதன்முதலாக விசேட சந்­திப்பில் பங்­கேற்­க­வுள்­ளது. அத்­துடன் குறித்த காலப்­ப­கு­தியில் புதிய இந்­திய மத்­திய அர­சாங்­கத்தின் முக்­கிய பிர­தி­நி­தி­க­ளு­டனும் விசேட பேச்­சு­வார்த்­தை­க­ளிலும் கலந்­து­கொள்­ள­வுள்­ளது.
புதுடில்லிக்கு பயணமானது தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு Reviewed by NEWMANNAR on August 21, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.