நாங்கள் திட்டமிட்டு ஒரு வரையறைக்குள் செலவு செய்கின்ற சமூகமாக இருக்க வேண்டும்-அமைச்சர் றிஸாட் பதியுதீன்.
ஜனாதிபதி மஹிந்த ராஜகபக்ஸ அரசாங்கத்தில் பசில் ராஜபக்ஸ அமைச்சராக வந்த பிறகு தான் இந்த சமூர்த்தி திட்டத்தை இந்த மாவட்டத்திற்கு தந்துள்ளார் என அமைச்சார் றிஸாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
திவிநெகும திட்டத்தின் கீழ் 'சஹன அருண' கடன் வழங்கும் திட்டம் நேற்று(1) திங்கட்கட்கிழமை அமைச்சரினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.அதனைத்தொடர்ந்து உரையாற்றுகையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,,,,
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையிலான அரசாங்கத்தில் அமைச்சர் பசில் ராஜபக்ஸ அவர்கள் அமைச்சராக வந்த பிறகு தான் இந்த சமூர்த்தியின் பார்வை,அதன் செயற்பாடு இந்த மாவட்டத்தை நோக்கி வந்துள்ளது.
எனவே இந்த மாவட்ட மக்கள் சார்பாக அவருக்கு நான் நன்றிகளை தெரிவித்துக்கொள்ளுகின்றேன். எங்களுடைய மக்களுக்காக நாங்கள் அவரிடத்தில் எதைக்கேட்டாலும் அள்ளித்தருபவராக இருக்கின்றார்.
இந்த மாவட்டத்தின் அபிவிருத்திக்காக பல உதவிகளை செய்துள்ளார்.ஒரு காலத்தில் திவிநெகும என்ற புதிய திணைக்களத்தை உறுவாக்கி சமூர்த்தி அதிகாரிகள் எல்லோரையும் அந்த திவிநெகும திணைக்களத்தினுள் உள்வாங்கி அவர்களுக்கு ஓய்வூதியம் பெறுகின்ற அதிகாரிகளாக மாற்றிய பெறுமை அமைச்சர் பசில் ராஜபகஸ அவர்களைச் சாறும்.
எனவே அவருடைய இந்த அமைச்சுக்காலத்திலே மிக திட்டமிட்டு சமூர்த்தியின் ஊடாக இந்த நாட்டிலே பொருளாதார மேம்பாட்டிற்காக பல ஆக்கபூர்வமான பணிகளைச் செய்கின்றார்.
-திவிநெகும திட்டத்தின் ஊடாக கிராமத்தில் இருக்கின்ற தனிநபரை அவருடைய பொருளாதாரத்ததை மேம்படுத்தி சொந்தக்காலிலே நிற்க வைக்கின்ற ஒரு சமூகமாக தனிநபரை மாற்றியமைத்து அந்த கிராம மக்கள் பிரதேச ரீதியாகவும்,மாவட்ட ரீதியாகவும் வளர்ந்து இந்த நாடு ஒரு காலத்தில் தேசிய ரீதியாக பொருளாதாரத்தில் மேம்படுவதற்கும்,இந்த மக்கள் பொருளாதாரத்தில் சொந்தக்காலில் நிற்பதற்கும் இந்தத்திட்டம் வழிவகுக்கின்றது.
எனவே இந்த அடிப்படையில் இந்த நாட்டின் சுற்றுலாத்துரை மேம்பாடைந்து கொண்டு போகின்றது.அதே போல ஏற்றுமதி அதிகரித்துச் செல்லுகின்றது. இந்த நாட்டின் முதலீடு அதிகரித்துச் செல்லுகின்றது.
இவ்வாறு இந்த நாட்டின் பொருளாதாரம் மேன்மையடைகின்ற நிலையில் இந்த மாவட்டத்தில் வாழுகின்ற குறிப்பாக மீன்பிடி,விவசாயம் ,வியாபாரத்தைச் செய்கின்ற மக்களாக காணப்படுகின்றனர்.
-எனவே மீன்பிடி,விவசாயத்துறையை மேம்படுத்துகின்ற வகையில் சமூர்த்தி திட்டத்தின் ஊடாக எவ்வாறு மீன் பிடி,விவசாயத்துரையினை மேம்படுத்துவது என்ற சிந்திக்க வேண்டியுள்ளது.இத்திட்டங்களை மேம்படுத்த வேண்டிய பொறுப்பு எமக்குள்ளது.
நாங்கள் திட்டமிட்ட ஒரு சமூகமாக,வரையறைக்குள் செலவு செய்கின்ற சமூகமாக,கிடைக்கின்ற வருமானங்துக்குள் வாழ்ந்து காட்டுகின்ற சமூகமாக நாங்கள் இருக்க வேண்டும்.
வாகனங்களை கொள்வனவு செய்வதற்காக,மோட்டார் சைக்கிளை வாங்குவதற்காக அல்லது வேறு வேறு தேவைக்காக வட்டிக்கு பணம் வேண்டி அதனை செலுத்த முடியாத நிலையில், இருக்கின்ற எமது சொத்துக்களை விற்கின்ற நிலைக்கு நாம் வந்து விடக்கூடாது.
எனவே நீங்கள் புத்திசாதுரியமாக நடந்து கொள்ள வேண்டும்.எனவே இந்த சமூர்த்தி திட்டம்,திவிநெகும திட்டம் இந்த மாவட்டத்திற்கு கிடைக்கப்பெற்றமையினால் பல அதிகாரிகளாக காணப்படுகின்ற போது நான் மகிழ்ச்சி அடைகின்றேன்.
மிகவும் இதய சுத்தியுடன் வேலை செய்கின்ற பல அதிகாரிகள் இங்கு இருக்கின்றார்கள்.எல்லோறும் இணைந்து இந்த மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்த ஒத்துழைத்து ஒன்றாக சேர்ந்து செயல்பட வேண்டும்.
கிராமத்தை எவ்வாறு முன்னேற்ற முடியும் என்ற திட்டங்களை வகுத்து திட்டங்களை மேற்கொள்ள வேண்டும்.அத்திட்டங்களுக்கு பண உதவிகளை செய்ய நாம் தயாராக இருக்கின்றோம்.என அமைச்சர் தனது உரையில் மேலும் தெரிவித்தார்.
நாங்கள் திட்டமிட்டு ஒரு வரையறைக்குள் செலவு செய்கின்ற சமூகமாக இருக்க வேண்டும்-அமைச்சர் றிஸாட் பதியுதீன்.
Reviewed by NEWMANNAR
on
September 02, 2014
Rating:
No comments:
Post a Comment