அண்மைய செய்திகள்

recent
-

75 ஏக்கரில் மூலிகைத் தோட்டம்! வடமாகாணத்தில் சித்த வைத்தியத்தை ஊக்குவிக்க நடவடிக்கை

வடமாகாணத்தில் சித்த வைத்தியத்தை ஊக்குவிக்க 75 ஏக்கரில் மூலிகைத் தோட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சின் வவுனியா அலுவலகத்தில் நேற்று திங்கள் கிழமை மாலை இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே சுகாதார அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

தமிழ் மக்களின் பாரம்பரியமான மருத்துவ முறை சித்த மருத்துவமே. ஆனால், இன்று அத்துறையானது வடமாகாணத்தில் அழிவடைந்து செல்கின்றது.

இதனால் வடமாகாண சபையினால் கிளிநொச்சி மாவட்டத்தின் கல்மடு பிரதேசத்தில் 100 ஏக்கர் காணி ஆயுள்வேத சித்த மருத்துவத்திற்கு என ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் 75 ஏக்கர் காணியில் மூலிகைச் செய்கையும் 25 ஏக்கரில் அதனை பதப்படுத்தி மருத்து உற்பத்தி செய்யவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இவ் வேலைத்திட்டம் தொடர்பாக இந்தியாவுக்கு விளக்கமளித்துள்ளதுடன் அவர்களின் உதவியே பெறப்படவுள்ளது. இதன் மூலம் உள்நாட்டு வேலைவாய்ப்பையும் மூலிகை உற்பத்தியையும் ஊக்குவிக்க முடியும். கிராம மட்டங்களில் சித்த மருத்துவம் செய்பவர்களையும் உள்வாங்கி பயிற்சிகளை வழங்க முடியும்.
75 ஏக்கரில் மூலிகைத் தோட்டம்! வடமாகாணத்தில் சித்த வைத்தியத்தை ஊக்குவிக்க நடவடிக்கை Reviewed by NEWMANNAR on September 01, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.