தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்ட 30 இந்திய மீனவர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவு.-Photo
இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட நிலையில் கைது செய்யப்பட்ட 30 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணம் இன்று வியாழக்கிழமை(11) உத்தரவிட்டார். இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து 6 படகுகளில் மீன் பிடியில் ஈடுபட்ட 30 இந்திய மீனவர்களை இன்று(11) வியாழக்கிழமை அதிகாலை கடற்படையினர் கைது செய்து தலைமன்னார் கடற்படையினரிடம் ஒப்படைத்தனர்.
கடற்படையினர் விசாரணைகளின் பின் குறித்த 30 மீனவர்களையும் இன்று மாலை 3.30 மணியளவில் மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்ததோடு மீன் பிடி வலைத்தொகுதிகளையும் ஒப்படைத்தனர். குறித்த மீனவர்களிடம் வாக்கு மூலத்தை பதிவு செய்த கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள் குறித்த மீனவர்களை இன்று மாலை 4 மணியளவில் மன்னார் நீதிமன்றத்தில் நீதவான் ஆனந்தி கனகரட்ணம் முன்னிலையில் ஆஜர் படுத்தினர்.
இதன் போது விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் குறித்த 30 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
இதே வேளை கடந்த திங்கட்கிழமை இரவு தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்ட ஒரு சிறுவன் உற்பட 06 இந்திய மீனவர்களும் நேற்று புதன் கிழமை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட போது குறித்த 6 மீனவர்களையும் எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்ட 30 இந்திய மீனவர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவு.-Photo
Reviewed by NEWMANNAR
on
September 11, 2014
Rating:

No comments:
Post a Comment