கண்டி நோக்கிச் சென்ற பஸ்ஸிலிருந்து விழுந்த பெண் உயிரிழப்பு
மாவனெல்லை பகுதியிலிருந்து கண்டி நோக்கிச் சென்ற தனியார் பஸ்ஸிலிருந்து விழுந்த பெண்ணொருவர் உயிரிழந்த சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
பஸ்ஸை நிறுத்துவதற்கு முன்பாகவே குறித்த பெண் அதிலிருந்து இறங்குவதற்கு முற்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
சம்பவத்தில் படுகாயமடைந்த பெண், கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் சம்பந்தப்பட்ட பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.
கண்டி நோக்கிச் சென்ற பஸ்ஸிலிருந்து விழுந்த பெண் உயிரிழப்பு
Reviewed by NEWMANNAR
on
September 05, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
September 05, 2014
Rating:


No comments:
Post a Comment