அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் வங்காலை கடற்கரையில் கரை ஒதுங்கிய ஆணின் சடலம்-Photo

மன்னார் நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட வங்காலை கடற்கரையோரப்பகுதியில் உருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவருடைய சடலம் இன்று(3) புதன் கிழமை காலை மீட்கப்பட்டுள்ளதாக மன்னார் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

 இன்று(3) புதன் கிழமை காலை தொழிலுக்குச் சென்ற மீனவர்கள் குறித்த சடலத்தை கண்டு வங்காலை பொலிஸாருக்கு தகவல்  வழங்கியுள்ளனர். இந்த நிலையில் வங்காலை பொலிஸார் மன்னார் பொலிஸாருக்கு தகவழ் வழங்கிய நிலையில் மன்னார் பொலஸார் சம்பவ இடத்திற்குச் சென்று சடலத்தை மீட்டுள்ளனர். குறித்த சடலம் வங்காலை கடற்படை முகாமில் இருந்து சுமார் 3 கிலோ மீற்றர் தொலைவில் கரை ஒதுங்கியுள்ளது.

குறித்த சடலம் நீல  நிற முழு ஆடையுடனும்,உள்ளாடையுடனும் கரையொதுங்கியுள்ளது. அருகில் முழு நீள காட்சட்டையும் காணப்படுகின்றது.குறித்த சடலம் யார் என இது வரை தெரியவரவில்லை.  

இந்த நிலையில் குறித்த சடலத்தை மன்னார் பொலிஸ் நிலையத்தின் உதவி பொறுப்பதிகாரி தனஞ்சய பெரமுன நேரில் சென்று பார்வையிட்டார். பின் மதியம் சம்பவ இடத்திற்குச் சென்ற மன்னார் மாவட்ட திடீர் மரண விசாரணை  அதிகாரி ரி.பி.சிந்தாத்துரை சடலத்தை பார்வையிட்டதோடு சடலத்தை மன்னார் வைத்தியசாலையில் ஒப்படைக்குமாறும்,பொலிஸாரின் வேண்டு கோளுக்கு அமைவாக சடலத்தை அடையாளம் காண்பதற்காக இரண்டு வாரங்களுக்கு பாதுகாப்பாக வைத்தியசாலையில் வைக்குமாறு பொலிஸாருக்கு திடீர் மரண விசாரணை  அதிகாரி ரி.பி.சிந்தாத்துரை உத்தரவிட்டுள்ளளார். 

 சடலம் தற்போது மன்னார் பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.






மன்னார் வங்காலை கடற்கரையில் கரை ஒதுங்கிய ஆணின் சடலம்-Photo Reviewed by NEWMANNAR on September 03, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.