அண்மைய செய்திகள்

recent
-

காணாமல் போன சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளான்

லிந்துலை மட்டுகலை தோட்டத்தில் மூன்று நாட்களுக்கு முன்னர் காணாமல் போனதாக கூறப்படும் சிறுவன் மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளான். லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மட்டுகலை தோட்டத்தைச் சேர்ந்த 16 வயது யோகநாதன் சிவதர்ஷன் என்ற சிறுவனைக் காணவில்லை என, கடந்த 4ஆம் திகதி பெற்றோர் லிந்துலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர். 

 குறித்த சடலம் இன்று காலை 7.30 அளவில் பிரதேச மக்களால் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது. சடலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள குறித்த சிறுவன் காணாமல் போனமை தொடர்பில் லிந்துலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்ததாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டது. 

 மீட்கப்பட்ட சடலம் நீர்த்தேக்கத்திற்கு அருகில் காணப்படுவதாகவும் நீதவான் விசாரணைகளின் பின்னர் பிரேத பரிசோதனைகளுக்காக சடலம் நுவரெலியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளதாக பொலிஸார் கூறினர். இதேவேளை, சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஹட்டன் நுவரெலியா வீதியை மறித்து பிரதேச மக்கள் தலவாக்கலை நகர சபைக்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவம் தொடர்பில் தலவாக்கலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
காணாமல் போன சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளான் Reviewed by NEWMANNAR on September 06, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.