கடற்பிராந்தியங்களில் காற்றின் வேகம் 70 கி.மீ வரை அதிகரிக்கலாம் – வளிமண்டலவியல் திணைக்களம்
புத்தளம் தொடக்கம் மன்னார் காங்கேசன்துறை ஊடாக பொத்துவில் வரையான கடற்பிராந்தியங்கள் சற்று கொந்தளிப்பாக அமையக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
குறித்த பிரதேசங்களில் காற்றின் வேகம் மணிக்கு 70 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.
இதேவேளை, கிழக்கு, ஊவா மாகாணங்கள் உள்ளிட்ட நாட்டின் சில பகுதிகளில் மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
தென்மேற்கு பருவக்காற்றின் வேகம் 20-40 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
கடற்பிராந்தியங்களில் காற்றின் வேகம் 70 கி.மீ வரை அதிகரிக்கலாம் – வளிமண்டலவியல் திணைக்களம்
Reviewed by NEWMANNAR
on
September 07, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
September 07, 2014
Rating:


No comments:
Post a Comment