ஜெயலலிதாவை குற்றவாளியென நிரூபித்த அந்த ‘நான்கு’ காரணங்கள்
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் அவருக்கு நான்கு வருட சிறைத்தண்டனையும், 100 கோடி ரூபா அபராதமும் விதிக்கப்பட்டது.
நீதிமன்றம் ஜெயலலிதாவை குற்றவாளியென தீர்மானித்தமைக்கான நான்கு முக்கிய காரணங்கள் உள்ளன.
01.ஜெயலலிதா கணக்கில் வராத 53 கோடி ரூபா (இந்திய மதிப்பில்) மதிப்புள்ள அசையா சொத்துக்களை வாங்கியதை அரசு தரப்பு நிரூபித்தது.
02.ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோர் சொத்துக்களை பெற்றுக்கொள்ள சதி செய்ததாக நிரூபிக்கப்பட்டது.
03.ஜெயலலிதாவின் வங்கி கணக்குகளில் அவரது வருமானத்தை விட அதிக அளவில் பணம் இருந்தமை நிரூபிக்கப்பட்டது.
04.சட்டவிரோதமாக சொத்துக்களை கொள்வனவு செய்ய ஒரு வங்கி கணக்கில் இருந்து மற்றுமொரு கணக்கிற்கு அடிக்கடி பணப்பரிமாற்றம் செய்யப்பட்டதும் நிரூபிக்கப்பட்டது.
ஜெயலலிதாவை குற்றவாளியென நிரூபித்த அந்த ‘நான்கு’ காரணங்கள்
Reviewed by NEWMANNAR
on
October 01, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
October 01, 2014
Rating:


No comments:
Post a Comment