அண்மைய செய்திகள்

recent
-

கிளி­நொச்சி மாவட்­டத்தில் அழி­வ­டைந்த நெற்­செய்கை விவ­சா­யி­க­ளுக்கு கால­போக நெற்­செய்­கைக்­கான விதைநெல்

கிளி­நொச்சி மாவட்­டத்தில் அழி­வ­டைந்த நெற்­செய்கை விவ­சா­யி­க­ளுக்கு தற்­போது கால­போக நெற்­செய்­கைக்­கான விதைநெல் வழங்­கப்­பட்டு வரு­கின்­றது. அண்­மையில் கிளி­நொச்சி கம­ந­ல­சேவை நிலை­யத்தில் விதை நெல் வழங்கும் ஆரம்ப நிகழ்வு நடை­பெற்­றது. 

இதன்­போது ஆயி­ரத்து 462 ஏக்கர் நிலப்­ப­ரப்­பிற்­காக 2 ஆயி­ரத்து 924 புசல் விதை­நெல்லை யாழ்.மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்பினர் மு.சந்­தி­ர­குமார் விவ­சா­யி­க­ளுக்கு வழங்கி வைத்தார். இந்­நி­கழ்வில் கிளி­நொச்சி, அக்­க­ராயன், உருத்­தி­ர­புரம், புளி­யம்­பொக்­கணை, முழங்­காவில் ஆகிய கம­ந­ல­சேவை நிலை­யங்­களைச் சேர்ந்த விவ­சா­யி­க­ளுக்கு விதை நெல் வழங்­கப்­பட்­டது. 

 மண்ணை நம்பி வாழ்­கின்ற விவ­சா­யிகள் காலத்­திற்­கேற்ப மாற்­றங்­க­ளையும் கவ­னத்தில் எடுத்து விவ­சாய நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ள வேண்டும். குறைந்­த­ளவு உற்­பத்திச் செலவில் அதி­க­ளவு இலா­பத்தைத் தரக்­கூ­டிய விவ­சாய நட­வ­டிக்­கை­க­ளுக்கு மாற வேண்டும். குறிப்­பாக விவ­சா­யிகள் அழி­வி­லி­ருந்து தங்­களைப் பாது­காத்துக் கொள்­வ­தற்கு விவ­சாய காப்­பு­றுதி நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட வேண்டும்.

 கடந்த வருடம் பருவ மழை பொய்த்துப் போன­மையால் இவ்­வ­ருடம் விவ­சா­யிகள் விதை நெல்லைக் கூடப் பெற­மு­டி­யாத துர்ப்­பாக்­கிய நிலை ஏற்­பட்­டுள்­ளது. இந்த நிலையைக் கருத்­திற்­கொண்டு வேறு வழி­களில் விவ­சா­யி­க­ளுக்கு விதை­நெல்லைப் பெற்றுக்கொடுக்கும் முயற்சிகளை மேற்கொண்டு தற்போது விதை நெல்லை வழங்கி வருகின்றோம் எனப் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.
கிளி­நொச்சி மாவட்­டத்தில் அழி­வ­டைந்த நெற்­செய்கை விவ­சா­யி­க­ளுக்கு கால­போக நெற்­செய்­கைக்­கான விதைநெல் Reviewed by NEWMANNAR on October 08, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.