மன்னாரில் 223 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்படவுள்ள 4 மாடிகளைக் கொண்ட புதிய மாவட்டச் செயலகத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு.-Photo
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அவர்களினால் மாவட்டச் செயலகங்களை வலுப்படுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ் மன்னார் மாவட்டச் செயலகத்தின் புதிய நான்கு(4) மாடிக் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று(14) செவ்வாய்க்கிழமை மாலை 5 மணியளவில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய தலைமையில் இடம் பெற்றது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அவர்களினால் ஒதுக்கப்பட்ட 223 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டின் கீழ் குறித்த கட்டிடம் அமைக்கப்படவுள்ளது.
குறித்த அடிக்கல் நாட்டும் நிகழ்விற்கு விருந்தினர்களாக அரச நிர்வாக மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் டி.எஸ்.செனவிரத்தின,கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சர் றிஸாட் பதியுதீன், அரச நிர்வாக மற்றும் உள்நாட்டு அலுவல்கள் பிரதி அமைச்சர் விஜய தஸநாயக்க,வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் ஆகியோர் கலந்து கொண்டு அடிக்கல்லினை நாட்டி வைத்தனர்.
இதே வேளை பிரதேசச் செயலாளர்கள் உள்ளுராட்சி மன்றங்களின் தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டு அடிக்கல்லினை நாட்டி வைத்தனர். இதனைத் தொடர்ந்து இடம் பெற்ற நிகழ்வில் தெரிவு செய்யப்பட்டு பயிற்சி நெறியை பூர்த்தி செய்த 21 கிராம அலுவலர்களுக்கான நியமனக்கடிதங்கள் வழங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து பிரதேசச் செயலகங்களுக்கான உபகரணங்கள்,வரட்சி நிவாரண பணம் ஆகியவையும் வழங்கி வைக்கப்பட்டது.
மன்னாரில் 223 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்படவுள்ள 4 மாடிகளைக் கொண்ட புதிய மாவட்டச் செயலகத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு.-Photo
Reviewed by NEWMANNAR
on
October 15, 2014
Rating:

No comments:
Post a Comment