அண்மைய செய்திகள்

recent
-

நாம் மௌன­மாக இருந்து காரி­யங்­களைச் சாதிக்க வேண்டும்:ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் மன்னார் ஆயர்


தமிழ் மக்­களின் நீண்ட கால அர­சியல் பிரச்­சி­னைக்கு தீர்வு காணப்­பட வேண்­டு­மாயின் நாம் மௌன­மாக இருந்து காரி­யங்­களைச் சாதிக்க வேண்டும். சகல தரப்­பி­ன­ரு­டனும் கலந்து ஆலோ­சித்து தீர்க்­க­மான முடிவை எடுக்க வேண்டும். கூட்­ட­மைப்பின் தலைவர் இரா. சம்­பந்தன் மிகவும் நிதா­ன­மான அர­சி­யல்­வாதி. அவ­ரு­டைய ஆற்­றல் தீர்க்­க­மான பேச்சு ஆகி­யவை எமக்கும் மகிழ்ச்சி தரு­கி­றது என மன்னார் ஆயர் ராஜப்பு ஜோசப் தெரிவத்துள்ளார்.


இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,,,,,,,,,,,,

தமிழ் மக்­களின் நீண்ட கால அர­சியல் பிரச்­சி­னைக்கு தீர்வு காணப்­பட வேண்­டு­மாயின் நாம் மௌன­மாக இருந்து காரி­யங்­களைச் சாதிக்க வேண்டும். சகல தரப்­பி­ன­ரு­டனும் கலந்து ஆலோ­சித்து தீர்க்­க­மான முடிவை எடுக்க வேண்டும். கூட்­ட­மைப்பின் தலைவர் இரா. சம்­பந்தன் மிகவும் நிதா­ன­மான அர­சி­யல்­வாதி. அவ­ரு­டைய ஆற்­றல் தீர்க்­க­மான பேச்சு ஆகி­யவை எமக்கும் மகிழ்ச்சி தரு­கி­றது. அந்­த­ரப்­பட்டு அவ­ச­ரப்­பட்டு கிடங்கில் விழ­மாட்டார். நிதா­ன­மாக நடக்கும் அவர் தலை­மைத்­து­வத்தைப் பின்­பற்றி நம்­மு­டைய அர­சியல் தலை­வர்கள் புத்தி ஜீவிகள் பேச்­சா­ளர்கள் கருத்­தா­ளர்கள் தமது கருத்தை வெளி­யிட வேண்டும் நடக்க வேண்டும்.

இன்­றைய அர­சியல் சூழ்­நி­லையை தமிழ் மக்கள் மிகவும் கவ­னத்­து­டனும் தூரப்­பார்­வை­யு­டனும் பயன்­ப­டுத்த வேண்­டிய காலத்தில் உள்ளோம். பேரி­ன­வா­திகள் அர­சியல் அதி­கா­ரத்தைப் பெறு­வ­தற்­காக தமிழர் பிரச்­சி­னையை ஒரு துரும்­பாக எப்­பொ­ழுதும் பயன்­ப­டுத்தி வந்­துள்­ளார்கள். இப்­பொ­ழுது புலி­க­ளு­டனும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பி­ன­ரு­டனும் இணைந்து தமி­ழீ­ழத்தை அமைக்க முயற்­சிக்­கி­றார்கள் எதி­ர­ணி­யினர் எனப் பொய்ப் பிர­சா­ரத்தை மேற்­கொண்டு எதி­ரணி வேட்­பா­ளரை ஒழித்­துக்­கட்­டு­வ­தற்கு தமிழ் மக்­களின் பிரச்­சி­னையை தமக்­கு­ரிய ஆயு­த­மாக கையில் எடுத்­துள்­ளனர்.

நாம் தமிழ் ஈழத்­தையோ பிரி­வி­னை­யையோ கோர­வில்லை. நாம் கேட்­ப­தெல்லாம் நியா­ய­மான அர­சி­யல்­தீர்வு. எங்­க­ளுக்கு சலுகை அர­சியல் வேண்டாம். உரிமை அர­சி­யலைத் தாருங்கள் என்றே கேட்­கிறோம். வட­கி­ழக்கில் நாம் சுதந்­தி­ர­மா­கவும் சுய நிர்­ணய உரி­மை­யு­டனும் வாழ வேண்டும் என்­பதே எமது கோரிக்­கை­யாகும். தென்­னி­லங்­கை­யி­லுள்ள அர­சி­யல்­வா­திகள் தமிழ் மக்­க­ளு­டைய பிரச்­சி­னையை தீர்க்க விருப்­ப­மில்­லா­த­வர்­க­ளா­கவே காணப்­ப­டு­கி­றார்கள். அதற்­காக தமி­ழீழம் என்ற மாயையை உரு­வாக்க பார்க்­கி­றார்கள்.

தமிழ் மக்­க­ளுக்கு எத்­த­கைய உரிமை வழங்­கப்­பட வேண்டும்? எப்­ப­டி­யான அர­சியல் தீர்வு முன்­வைக்­கப்­பட வேண்டும்? அவர்கள் பட்ட துன்­பங்கள் துய­ரங்கள் இழப்­பு­க­ளுக்­கு­ரிய பரி­கா­ர­மென்ன? என்­பதை உணர்ந்து நியா­ய­மான தீர்ப்பை வழங்க யார் தயா­ராக இருக்­கி­றார்­களோ அவர்­களை ஏற்­றுக்­கொள்­வதே நிதா­ன­மான முடி­வாக இருக்கும். அதுவே மக்­களின் எதிர்­பார்ப்­பு­மாகும். எடுக்கும் தீர்­மானம் மீண்டும் படு­கு­ழியில் தள்­ளு­வ­தாக இருக்கக் கூடாது. எனவே ஒரு தலை­மையின் கீழ் ஒன்­று­பட்டு அத்­த­லை­மையின் கீழ் எடுக்க வேண்­டிய முடி­வு­களை எடுக்க வேண்டும். இன்­றைய சூழலில் மக்­களே தீர்­மானம் எடுக்கும் ஆற்றல் கொண்­ட­வர்கள். அவர்கள் தீர்க்­க­மா­கவும் சரி­யான முடி­வு­க­ளையும் எடுப்­பார்கள் என நாம் நம்­பலாம். அது­வரை மௌனம் சாதிப்­பதே சிறந்த அர­சியல் தந்­தி­ரோ­பா­ய­மாக இருக்கும் என்றார்.
நாம் மௌன­மாக இருந்து காரி­யங்­களைச் சாதிக்க வேண்டும்:ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் மன்னார் ஆயர் Reviewed by NEWMANNAR on November 30, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.