அண்மைய செய்திகள்

recent
-

சீரற்ற கால நிலை கார­ண­மாக 10 பேர் பலி : 1இலட்­சத்து 61 ஆயிரம் குடும்­பங்கள் பாதிப்பு

நாடளாவிய ரீதியில் நிலவும் சீரற்ற கால நிலை காரணமாக 6 மாகாணங்களில் 16 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 10 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த வாரத்துக்குள் மட்டும் வெள்ளப் பெருக்கு, மண்சரிவு ஆகிய அனர்த்தங்களினாலேயே இந்த 10 பேரும் உயிரிழந்துள்ளதுடன் நேற்று மாலை ஆகும் போது 5 இலட்சத்து 74 ஆயிரத்து 495 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர்.



அத்­துடன் 3227 வீடுகள் முற்­றா­கவும் 10587 வீடுகள் பகு­தி­ய­ள­விலும் சேத­ம­டைந்­து ள்­ளன. வெள்ள அனர்த்தம் அல்லது நீரில் அடித்துச் செல்லப்பட்டு ஏற்பட்ட மரணங்கள் 8 உம் மண்சரிவால் ஏற்பட்ட மரணங் கள் இரண்டும் நேற்று மாலைவரை பதிவா கியிருந்தன.

வெள்ளம் கார­ண­மாக கிழக்கு மாகா­ண த்­துக்கே அதி­க­ள­வான பாதிப்­புக்கள் ஏற்­பட்­டுள்ள நிலையில் மட்­டக்­க­ளப்பு மாவ ட்­டத்தின் கோறளைப் பற்று மற்றும் கோற ளைப்­பற்று தெற்கு ஆகிய பிர­தேச செய­ லாளர் பிரி­வு­களில் தலா ஒரு உயி­ரி­ழப்­புக்­களும், மட்டக்களப்பு பிரதேசத்தின் வீச்சுக் கல்முனை பிரதேச விமானப்படை முகாமை அண்மித்த பகுதியில் ஒரு மரண மும், அம்­பாறை மாவட்­டத்தின் நிந்­தவூர் பிர­தே­சத்தில் ஒரு மர­ணமும் திருகோண மலை மாவட்டத்தின் மூதூர், கேர்ணிக்காடு பிரதேசத்தில் ஒரு மரணமும் பதிவாகியுள் ளன. அதன்படி கிழக்கு மாகாணத்தில் மட் டும் ஐந்து மரணங்கள் பதிவாகியுள்ளன. அத்துடன் எம்­பி­லி­பிட்­டிய, மக­பெ­லஸ்ஸ பிர­தே­சத்தில் சப்­பாத்து பாலத்தின் ஊடாக கரையை அடைய முயற்­சித்த மூன்று பெண்கள் வெள்ள நீரில் அடித்துச் செல்­லப்­பட்டு உயி­ரி­ழந்த நிலையில் மீட்­கப்­பட்­டுள்­ளனர். இதனால் வெள்ளத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்தது.

இதேவேளை நேற்று முன் தினம் மலை யகத்தின் மினிப்பே பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி இருவர் உயிரிழந்ததாக கண்டி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் இந்திக்க ரணவீர தெரிவித்தார். இதனுடன் சேர்த்தே சீரற்ற கால நிலை காரணமாக ஏற்பட்ட உயிரிழப்புக்களின் எண்ணிக்கை இந்தவாரம் 10 பேரை எட்டியுள்ளது.

அத்­துடன் அனு­ரா­த­புரம், கஹட்­ட­கஸ்­தி­கி­லிய பிர­தே­சத்தில் வெள்ளம் காரணமாக நபர் ஒருவர் காயமடைந்துள்ளதுடன் வவு­னியா பிர­தே­சத்­திலும் ஒருவர் காயமடைந் துள்ளதாக அனர்த்த முகா­மைத்­துவ மத்­திய நிலையம் குறிப்­பிட்­டது.

இதேவேளை நேற்று முன்தினம் தமண பிரதேசத்தில் தாயொருவர் தனது மூன்று வயதான குழந்தை, மற்றும் இருவருடன் பயணித்துக் கொண்டிருந்த போது பாரிய நீரோட்டம் ஒன்றினால் அடித்துச் செல்லப் பட்டுள்ளனர். மழை வெள்ளம் காரணமாக ஏற்பட்ட இந்த பாரிய நீரோட்டத்தில் சிக்கி 100 மீற்றர்கள் வரை அடித்துச் செல்லப்ப ட்ட இவர்கள் நால்வரும் தமணை பொலி ஸாரின் நடவடிக்கை காரணமாக மீட் கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர். இவர்கள் நால்வருக்கும் எவ்வித பாதிப்புக் களும் ஏற்படவில்லை எனவும் பொலிஸார் சுட்டிக்காட்டினர்.

இதனை விட நேற்று மாலை ஆகும் போது பாதிக்­கப்­பட்­டிருந்த 574495 பேரில் 21439 குடும்­பங்­களை சேர்ந்த 75489 பேர் 299 நலன்­புரி நிலை­யங்­களில் தங்­க­வைக்­கப்­பட்­டுள்­ள­த­ாகவும் அவர்­க­ளுக்கு தேவை­யான உலர் உண­வு­களை அனர்த்த நிவா­ரண சேவைகள் அமைச்சின் ஊடாக வழங்­கி­வ­ரு­வ­தா­கவும் அனர்த்த முகா­மைத்­துவ மத்­திய நிலை­யத்தின் ஊடகப் பேச்­சாளர் சரத் லால் குமார குறிப்­பிட்டார்.

வடக்கின் யாழ்ப்­பாணம்,வவு­னியா, கிளி­நொச்சி, முல்லைத்தீவு,மன்னார் மாவட்­டங்­களும், கிழக்கின் திரு­கோ­ண­மலை, மட்­ட க்­க­ளப்பு, அம்­பாறை மாவட்­டங்­களும் வட­மத்­திய மாகா­ணத்தின் அனு­ரா­த­புரம், பொலன்­ன­றுவை மாவட்­டங்­களும், வட மேல் மாகா­ணத்தின் குரு­ணாகல், புத்­தளம் ஆகிய மாவட்­டங்­களும் மத்­திய மாகா­ணத் தின் கண்டி, நுவ­ரெ­லியா மற்றும் மாத்­தளை ஆகிய மாவட்­டங்­களும் சப்ரகமுவ மாகாணத்தின் கேகாலையிலும் அடை மழை கார­ண­மாக ஏற்­பட்ட வெள்ளப் பெரு க்­கி­னாலும் ஊவா மாகா­ணத்தின் பதுளை மாவட்டம் மண்­ச­ரிவு அச்­சு­றுத்­த­லாலும் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தாக அனர்த்த முகா­மைத்­துவ மத்­திய நிலையம் குறிப்­பிட்­டது.

இந்த அடை­மழை கார­ண­மாக ஏற்­பட்­டு ள்ள வெள்­ளத்­தினால் கிழக்கிற்கே அதிக பாதிப்­புக்கள் ஏற்­பட்­டுள்­ளன.

கிழக்கு நிலைவரம்

கிழக்கை பொறுத்­த­வரை நேற்றும் அடை மழை­யுடன் கூடிய கால நிலை நீடித்­தது.இதனால் வெள்ளம் கார­ண­மாக திரு­கோ­ண­ம­லையில் 11555 குடும்­பங்களைச் சேர்ந்த 36238 பேரும் மட்­டக்­க­ளப்பில் 117762 குடு ம்­பங்­களை சேர்ந்த 421702 பேரும் அம்­பா­றையில் 8062 குடும்­பங்­களை சேர்ந்த 28797 பேரும் பாதிக்­கப்பட்­டுள்­ளனர். கிழக்கை பொறுத்­த­வரை மொத்­த­மாக 486737 பேர் வெள்­ளத்தால் பாதிக்­கப்பட்­டுள்ள நிலையில் அவர்­களில் 14406 குடும்­பங்­களை சேர்ந்த 50493 பேர் 141 நலன்­புரி முகாம்­களில் தங்­க­வைக்­கப்பட்­டுள்­ளனர்.
வெள்ளம் கார­ண­மாக கிழக்கில் ஐந்து மர­ணங்கள் பதி­வா­கி­யுள்­ள­ன.

இதேவேளை கிழக்கில் 3106 வீடுகள் முற் ­றா­கவும் 6541 வீடுகள் பகு­தி­ய­ள­விலும் சேத­ம­டைந்­துள்­ள­தாக அனர்த்த முகா­மைத்­துவ மத்­திய நிலையம் குறிப்­பி­டு­கின்­றது. கிழக்கு மாகா­ணத்தின் பெரும்­பா­லான விளை நில ங்கள் வெள்­ளத்தில் மூழ்­கி­யுள்­ள­துடன் அந்த மாகாண மக்­களின் இயல்பு வாழ்க்­கையும் பெரிதும் பாதிக்­கப்பட்­டி­ருந்­தது. சுமார் 50 ஏக்கர் விளை நிலம் இவ்வாறு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.

அனு­ரா­த­புரம்

அனு­ரா­த­புரம் மாவட்­டத்தில் அதி­க­மான பகுதி நீரில் மூழ்­கி­யுள்ள நிலையில் அந்த நக­ரத்தின் வழ­மை­யான நட­வ­டிக்­கைகள் நேற்று ஓரளவு வழமைக்கு திரும்பியிருந்தன.
அத்­துடன் திஸ்ஸ­ம­ஹ­ராம உள்­ளிட்ட அனு­ராதபுர குளங்கள் நிரம்பி வழியும் நிலை யில் தொடர்ந்தும் மல்­வத்து ஓயாவின் நீர்­மட்டம் உயர்ந்து அந்த ஆறு பெருக்­கெ­டுத்­ துள்­ளது.
அனு­ராதபுரம் பிர­தே­சத்தில் 6224 குடும்­பங்­களை சேர்ந்த 20884பேர் வெள்ளம் கார­ண­மாக பாதிக்­கப்­பட்­டி­ருப்­ப­தா­கவும் அங்கு ஒருவர் காணாமல் போயுள்­ள­த­ாகவும் குறிப்­பிட்ட அனர்த்த முகா­மைத்­துவ மத் திய நிலையம் பாதிக்­கப்­பட்­ட­வர்­களில் 908 குடும்­பங்­களை சேர்ந்த 3000 பேர் 26 நலன்­ புரி நிலை­யங்­களில் தங்க வைக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் ஏனையோர் உற­வினர் வீடு­களில் தஞ்சம் அடைந்­துள்­ள­தா­கவும் குறிப்­பிட்­ட னர்.

பொலன்­ன­றுவை

பொலன்­ன­றுவை மாவட்­டத்­திலும் வெள் ள அச்­சு­றுத்தல் தொடர்­கின்­றது. பொலன்­ன­று­வையை பொறுத்­த­வரை அங்கு பெரும்­பா­லான குளங்கள் நிரம்­பி­யுள்­ள­தா­கவும் இதனால் பல குளங்­களின் வான் கத­வுகள் நேற்றும் திறக்­கப்­பட்­டி­ருந்­த­தா­கவும் நீர்ப்­பா­சன திணைக்­களம் தெரி­வித்­தது.பொலன்­ன­றுவை மாவட்­டத்தை பொறுத்­த­வரை 3579 குடும்­பங்­களை சேர்ந்த 142571 பேர் மழை வெள்ளம் கார­ண­மாக பாதிக்­கப் பட்­டுள்­ளனர். இப்­பி­ர­தே­சத்தின் ஊடான போக்கு வரத்து பெரும்­பாலும் தடை பட்­டு ள்ள நிலையில் மகா­ப­ராக்­கி­ர­ம­பாகு, கவுடுல வாவி, மின்­னே­ரிய குளம், ஆகி­ய­னவும் பெருக்­கெ­டுத்­துள்­ளன. இதன் கார­ண­மாக ஆயிரக் கணக்­கான பயிர் நிலங்கள் வெள்­ளத்தில் மூழ்­கி­யுள்­ளன.

வடக்கு நிலை­வரம்

இதே­வேளை நிலவும் சீரற்ற கால நிலை யால் வடக்கின் யாழ்ப்­பாணம், கிளி­நொச்சி, வவு­னியா, முல்லைத் தீவு மற்றும் மன்னார் ஆகிய மாவட்­டங்கள் பாதிப்­புக்­களை சந்­தித்­துள்­ளன. யாழ்ப்­பா­ணத்தில் 4656 பேரும் வவு­னி­யாவில் 5494 பேரும், கிளி­நொச்­சி யில் 10781 பேரும், முல்லை தீவில் 2044 பேரும் மன்­னாரில் 6573 பேரும் வெள்ளம் கார­ண­மாக பாதிக்­கப்பட்­டுள்­ள­தாக அனர்த்த முகாமைத்துவ மத்­திய நிலையம் குறிப்­பிட்­டது. இதனை விட வடக்கில் 34 வீடுகள் முழு­மை­யாக சேத­ம­டைந்­துள்­ள­துடன் 2725 வீடுகள் பகு­தி­ய­ள­வான பாதிப்­புக்­க­ளுக்கு உள்­ளா­கி­யுள்­ளன.

மலை­யகம்

மலை­யகப் பகு­தியில் மாத்­தளை, கண்டி, மற்றும் நுவ­ரெ­லியா ஆகிய மாவட்­டங்­க ளில் தொடர்ந்தும் அடை­மழை பெய்து வரும் நிலையில் வெள்­ளத்­தினால் மக்கள் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தாக அனர்த்த முகா­மைத்­துவ நிலையம் குறிப்­பி­டு­கின்­றது. மாத்­த­ளையில் 531 பேர் வெள்­ளத்­தினால் பாதிக்­கப்பட்­டுள்­ள­தா­கவும் நுவ­ரெ­லி­யாவில் 275 பேரும் கண்­டியில் 273 பேரும் வெள்­ளத்­தினால் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். அத்­துடன் நேற்றும் மலை­ய­கத்தில் பெய்த அடை மழை கார­ண­மாக பிர­தே­சங்கள் பல­வற்­றி­ன தும் நீர் நிலைகள் நிரம்ப ஆரம்­பித்­துள்­ளன.

இதனை விட கண்டி, மினிப்பேயில் நேற்று முன்தினம் ஏற்பட்ட மண் சரிவு கார ணமாக இரு மரணங்கள் பதிவாகின.அத்­துடன் கண்டி, நுவ­ரெ­லி­யா­மற்றும் பதுளை ஆகிய மூன்று மாவட்­டங்­க­ளுக்­கான மண் சரிவு அபாய எச்­ச­ரிக்கை அடுத்த 24 மணி நேரத்­துக்கு நீடிக்­கப்­பட்­டுள்­ளது. பதுளை மாவட்­டத்தில் மட்டும் மண் சரிவு அச்­சு­றுத்தல் கார­ண­மாக 102 குடு­ம்பங்­களை சேர்ந்த 361 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர்.
சீரற்ற கால நிலை கார­ண­மாக 10 பேர் பலி : 1இலட்­சத்து 61 ஆயிரம் குடும்­பங்கள் பாதிப்பு Reviewed by NEWMANNAR on December 25, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.