குடும்ப அரசியலுக்கும் பொது மக்களுக்கும் இடையிலான போராட்டமே ஜனாதிபதி தேர்தல்!- ஹேமகுமார
குடும்ப அரசியலுக்கும் பொது மக்களுக்கும் இடையிலான போராட்டமே இம்முறை ஜனாதிபதி தேர்தல் என மவ்பிம லங்கா கட்சியின் தலைவர் ஹேமகுமார நாணயக்கார தெரிவித்துள்ளார்.
பொது வேட்பாளர் மைத்திரிபாலவின் வெற்றி நிச்சயமானது. மைத்திரிபாலவின் வெற்றி பொது மக்களின் வெற்றியாகும்.
இந்த அரச குடும்பத்தின் தோல்வியை உறுதி செய்ய வேண்டியது அவசியமானது.
நாட்டை சீர்குலைத்த ராஜபக்ச ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வர வேண்டியது மிகவும் அவசியமானது.
நாட்டில் இரண்டு குழுக்கள் காணப்படுகின்றன. ஒன்று மைத்திரிபால மக்கள் குழு மற்றையது ராஜபக்ச குடும்பக் குழு.
ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க ராஜபக்ச குடும்பத்தின் கறைகளை கழுவ முன்வந்தமை வருத்தமளிக்கின்றது.
ராஜபக்ச அரசாங்கத்தை தோல்வியடையச் செய்ய அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
கொழும்பு ஊடகமொன்றுக்கு ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தொலைபேசி மூலம் கருத்து வெளியிட்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
குடும்ப அரசியலுக்கும் பொது மக்களுக்கும் இடையிலான போராட்டமே ஜனாதிபதி தேர்தல்!- ஹேமகுமார
Reviewed by NEWMANNAR
on
December 14, 2014
Rating:

No comments:
Post a Comment