அழகுசாதன விற்பனை நிலையங்களில் திடீர் சோதனை
அனுமதிப் பத்திரமின்றி சட்டவிரோதமான முறையில் இயங்கும் அழகுசாதனப் பொருட்கள் விற்பனை நிலையங்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்க அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
அழகுசாதனப் பொருட்களின் விற்பனை நிலையங்கள் தொடர்பாக நுகர்வோர் அதிகார சபைக்கு கிடைக்கும் முறைப்பாடுகளின் எண்ணிக்கை தினசரி அதிகரித்து வருகின்றது.
இதனால் அரசாங்கம் அழகு சாதன பொருட்களின் விற்பனை நிலையங்கள் தொடர்பாக திடீர் சோதனைகளை நடத்தவும் திட்டமிட்டுள்ளது.
நுகர்வோர் அதிகார சபை, மருந்துகளை ஒழுங்குபடுத்தும் அதிகார சபையுடன் இணைந்து இந்த திடீர் சோதனைகளை நடத்தவுள்ளது.
அனுமதிப் பத்திரமின்றி இயங்கும் அழகுசாதனப் பொருட்களின் விற்பனை நிலையங்கள் மட்டுமன்றி, தரமற்ற அழகுசாதனப் பொருட்களை விற்பனை செய்யும் நிலையங்களின் அனுமதிப் பத்திரங்களை ரத்துச்செய்யவும் நுகர்வோர் அதிகார சபை தீர்மானித்துள்ளது.
அழகுசாதன விற்பனை நிலையங்களில் திடீர் சோதனை
Reviewed by NEWMANNAR
on
December 14, 2014
Rating:

No comments:
Post a Comment