கடும் மழையுடனான காலநிலை வெள்ளிக்கிழமை வரை நீடிக்கும்! வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு
நாட்டின் பல பாகங்களிலும் ஏற்பட்டுள்ள கடும் மழையுடனான காலநிலை நாளை மறுதினம் வெள்ளிக்கிழமைவரை நீடிக்கும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இலங்கையின் வடகிழக்கே ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக வடக்கு, கிழக்கு, மத்திய, வடமத்திய, தென் மாகாணங்களில் மழை தொடர்வதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து கொழும்பு வளிமண்டலவியல் திணைக்கள வானிலை அதிகாரி ஏ.எம.முஹம்மது சாலிஹீன் தெரிவித்தவை வருமாறு:- சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை தொடர்கிறது.
கடும் மழையுடனான காலநிலை வெள்ளிக்கிழமை வரை நீடிக்கும்! வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு
Reviewed by NEWMANNAR
on
December 25, 2014
Rating:

No comments:
Post a Comment