வடமாகாண சபை உறுப்பினர் ச.சுகிர்தனுக்கு கொலை அச்சுறுத்தல்! பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
வடமாகாண சபை உறுப்பினர் சந்திரலிங்கம் சுகிர்தனுக்கு இன்று (செவ்வாய்க் கிழமை) மாலை 6.45 மணியளவில் மர்மநபர்கள் கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்.
அரசியல் பணிகளின் நிமிர்த்தம் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த பொழுது வடமராட்சி துன்னாலைச் சந்திக்கு சமீபமாக இடைமறித்த மர்மநபர்கள் சுகிர்தனையும் அவருடைய குடும்பத்தினரையும் கொலை செய்வோம் என அச்சுறுத்தியதுடன் இன்றிலிருந்து அரசியல் பணிகளை மேற்கொள்ளக்கூடாது எனவும் எச்சரித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக மாகாண சபை உறுப்பினர் ச.சுகிர்தன் கருத்துத் தெரிவிக்கையில்,
நான் இன்று அரசியல் பணிகளுக்காக மோட்டர் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த பொழுது மாலை 6.45 மணியளவில் துன்னாலைச் சந்திக்கும் முள்ளிக்கும் இடையில் மோட்டார் சைக்கிளில்வந்த இரண்டு மர்மநபர்கள் வழிமறித்து கெட்ட வார்த்தைகளால் என்னைத் திட்டினர்.
இதன்பொழுது நீங்கள் யார் என குறித்த இருவரிடமும் நான் கேட்டேன். அப்பொழுது, ‘நீர் எமக்கு எதிராகச் செயற்பட்டுவருகின்றீர். தொடர்ந்தும் எமக்கு எதிராகச் செயற்பட்டால் உன்னையும் உனது குடும்பத்தையும் கொல்லுவோம்’ என எச்சரித்த பின்னர் அவ்விடத்திலிருந்து தப்பிச்சென்றுவிட்டனர்.
வடமாகாண சபை உறுப்பினர் ச.சுகிர்தனுக்கு கொலை அச்சுறுத்தல்! பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
Reviewed by NEWMANNAR
on
December 24, 2014
Rating:

No comments:
Post a Comment