தம்பனைக்குளம் மற்றும் மடுக்கரை கிராம மக்கள் மாற்றுக்காணி,வீட்டுத்திட்டம் பெற்றுத்தருமாறு கோரிக்கை-Photos
மன்னார் தம்பனைக்குளம் மற்றும் மடுக்கரை கிராமங்களில் வருடா வருடம் ஏற்படும் வெள்ளம் காரணமாக தாம் தொடர்ச்சியாக இடப்பெயர்வுகளை சந்திக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் இனியும் இவ்வாரான இடப்பெயர்வை சந்திக்காது இருக்க மாற்றுக்காயி மற்றும் வீட்டுத்திட்டத்தை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு குறித்த இரு கிராம மக்களும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோநோகராதலிங்கம் அவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மன்னார் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெறுக்கின் காரணமாக இடம் பெயர்ந்துள்ள மக்களை தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம் நேற்று செவ்வாய்க்கிழமை(23) நேரில் சென்று பார்வையிட்ட போதே அந்த மக்கள் குறித்த கோரிக்கையை விடுத்துள்ளனர்.
மன்னார் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள கடும் வெள்ளம் காரணமாக பாதீக்கப்பட்ட தம்பனைக்குளம் கிராம மக்கள் தற்போது சின்னப்பண்டிவிருச்சான் ம.வி பாடசாலையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த மக்களை நேரில் சென்று பாராளுமன்ற உறுப்பினர் பார்வையிட்டார்.இதன் போது சின்ன பண்டிவிருச்சான் பாடசாலையில் 06 மலசல கூடங்கள் மாத்திரமே காணப்படுகின்றது.அதனை சுமார் 150 பேர் மாத்திரமே பயஙண் படுத்த முடியும்.ஆனால் குறித்த பாடசாலையில் 1200 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதனால் இப்பாடசாலையில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்கள் பல்வேறு சுகாதார பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருவதாக அந்த மக்கள் பாராளுமன்ற உறுப்பினரிடம் முறையிட்டுள்ளனர்.
-இதே வேளை நானாட்டன் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட மடுக்கரை கிராமத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக அக்கிராம மக்கள் நானாட்டான் ம.வி பாடசாலையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.அக்கிரா மக்களை பார்வையிட்ட பாராளுமன்ற உறுப்பினர் அம்மக்களுக்கு தேவையான உதவிகளை மேற்கொள்ளுவது குறித்து உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.
-இதனைத் தொடர்ந்து வவுனியா கனேசபுரம்,கண்ணாட்டி ஆகிய கிராமங்களில் வெள்ளத்தினால் பாதீக்கப்பட்ட மக்களையும் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம் பார்வையிட்டதோடு அந்த மக்களுக்கு தேவையான உதவிகளை மேற்கொள்ள நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளார்.
மன்னார் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெறுக்கின் காரணமாக இடம் பெயர்ந்துள்ள மக்களை தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம் நேற்று செவ்வாய்க்கிழமை(23) நேரில் சென்று பார்வையிட்ட போதே அந்த மக்கள் குறித்த கோரிக்கையை விடுத்துள்ளனர்.
மன்னார் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள கடும் வெள்ளம் காரணமாக பாதீக்கப்பட்ட தம்பனைக்குளம் கிராம மக்கள் தற்போது சின்னப்பண்டிவிருச்சான் ம.வி பாடசாலையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த மக்களை நேரில் சென்று பாராளுமன்ற உறுப்பினர் பார்வையிட்டார்.இதன் போது சின்ன பண்டிவிருச்சான் பாடசாலையில் 06 மலசல கூடங்கள் மாத்திரமே காணப்படுகின்றது.அதனை சுமார் 150 பேர் மாத்திரமே பயஙண் படுத்த முடியும்.ஆனால் குறித்த பாடசாலையில் 1200 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதனால் இப்பாடசாலையில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்கள் பல்வேறு சுகாதார பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருவதாக அந்த மக்கள் பாராளுமன்ற உறுப்பினரிடம் முறையிட்டுள்ளனர்.
-இதே வேளை நானாட்டன் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட மடுக்கரை கிராமத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக அக்கிராம மக்கள் நானாட்டான் ம.வி பாடசாலையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.அக்கிரா மக்களை பார்வையிட்ட பாராளுமன்ற உறுப்பினர் அம்மக்களுக்கு தேவையான உதவிகளை மேற்கொள்ளுவது குறித்து உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.
-இதனைத் தொடர்ந்து வவுனியா கனேசபுரம்,கண்ணாட்டி ஆகிய கிராமங்களில் வெள்ளத்தினால் பாதீக்கப்பட்ட மக்களையும் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம் பார்வையிட்டதோடு அந்த மக்களுக்கு தேவையான உதவிகளை மேற்கொள்ள நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளார்.
தம்பனைக்குளம் மற்றும் மடுக்கரை கிராம மக்கள் மாற்றுக்காணி,வீட்டுத்திட்டம் பெற்றுத்தருமாறு கோரிக்கை-Photos
Reviewed by NEWMANNAR
on
December 25, 2014
Rating:
.jpg)
No comments:
Post a Comment