இரண்டு குழந்தைகள் நீரில் மூழ்கி பலி
கிளிநொச்சி, பச்சிலைப்பளை, தம்பகாம் பகுதியில் நீர் நிரம்பிய குழிக்குள் வீழ்ந்து இரண்டு குழந்தைகள் சனிக்கிழமை (17) உயிரிழந்துள்ளதாக பளைப் பொலிஸார் தெரிவித்தனர். அதேயிடத்தை சேர்ந்த உதயசந்திரன் யஸ்மிதா (2 ½ வயது), யூலியஸ் டானியல் (ஒரு வயது) ஆகிய இரு குழந்தைகளே உயிரிழந்துள்ளது.
மாலையில் வீட்டு வளவுக்குள் விளையாடிக் கொண்டிருந்த இரண்டு குழந்தைகளும், வளவுக்குள் இருந்த நீர்நிரம்பிய குழிக்குள் வீழ்ந்துள்ளன. பெற்றோர்கள் கவனிக்காத நிலையில் இரண்டு குழந்தைகளும் உயிரிழந்துள்ளன. வீடு கட்டுவதற்காக மண் எடுக்கப்பட்ட குழியினுள்ளே குழந்தைகள் வீழ்ந்துள்ளன.
ஒன்றுவிட்ட சகோதரர்களான குழந்தைகளின் சடலம் மீட்கப்பட்டு தற்போது பளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பளைப் பொலிஸார் தெரிவித்தனர்.
இரண்டு குழந்தைகள் நீரில் மூழ்கி பலி
Reviewed by NEWMANNAR
on
January 18, 2015
Rating:

No comments:
Post a Comment