நாட்டிற்கு வருகைதந்த வெளிநாட்டு தேர்தல் கண்காணிப்பாளர்கள் தமது நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர்-பெவ்ரல்
நாட்டிற்கு வருகைதந்த வெளிநாட்டு தேர்தல் கண்காணிப்பாளர்கள் தமது கண்காணிப்பு நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக பெவ்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டிஆராச்சி தெரிவித்துள்ளார்.
தேர்தல் ஆணையாளரின் வேண்டுகோளுக்கிணங்க வெளிநாட்டு தேர்தல் கண்காணிப்பாளர் வருகைதந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை தேர்தல் கண்காணிப்பு பணிகளுக்காக 55 வௌிநாட்டு தேர்தல் கண்காணிப்பாளர்கள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக தேர்தல்கள் செயலகம் குறிப்பிட்டுள்ளது.
இவ்வாறு வருகைதந்த வௌிநாட்டு கண்காணிப்பாளர்கள் நாட்டின் பல மாவட்டங்களுக்கும் கண்காணிப்பு பணிகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.
நாட்டிற்கு வருகைதந்த வெளிநாட்டு தேர்தல் கண்காணிப்பாளர்கள் தமது நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர்-பெவ்ரல்
Reviewed by NEWMANNAR
on
January 05, 2015
Rating:
Reviewed by NEWMANNAR
on
January 05, 2015
Rating:


No comments:
Post a Comment