வாக்களிப்பதற்கு விடுமுறை வழங்க மறுக்கும் தொழில்தருநர்கள் மீது சட்ட நடவடிக்கை
வாக்களிப்பதற்கு விடுமுறை வழங்க மறுக்கும் தொழில்தருநர்கள் மீது சட்ட நடவடிக்கை சௌமிய இளைஞர் நிதியம் அறிவிப்பு வெளிமாவட்டங்களில் தொழில்புரியும் மலையகத்தைச் சேர்ந்த இளைஞர், யுவதிகளுக்கு வரும் எட்டாம் திகதி நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்கு விடுமுறை வழங்க தொழில் தருநர்கள் மறுக்கும் பட்சத்தில் சட்ட நடவடிக்கைகளுக்கு முகம் கொடுக்க வேண்டி வரும் என்று தேர்தல் ஆணையாளருடனான சந்திப்பின் போது தெரிவித்ததாக சௌமிய இளைஞர் நிதியத் தின் தலைவர் எஸ்.பி. அந்தோனிமுத்து தெரிவித்துள்ளார்.
வெளிமாவட்டங்களில் தொழில்புரியும் மலையகத்தைச்சேர்ந்த இளைஞர், யுவதிகளுக்கு வரும் எட்டாம் திகதி நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்கு விடுமுறை வழங்க தொழில் தருநர்கள் பலர் மறுத்து வருவதாக தெரிய வருகின்றது. இதன் காரணமாக கொழும்பு கண்டி தம்புள்ள மற்றும் வடக்கு, கிழுக்கு மாவட்டங்களில் தொழில் புரியும் மலையகத்தைச் சேர்ந்த சுமார் இரண்டு லட்சத்திற்கு மேற்ப ட்ட இளைஞர், யுவதிகள் வாக்களிப்பதற்கான சந்தர்ப்பத்தை இழக்கின்றனர். ஜனவரி எட்டாம் திகதி வியாழக்கிழமை என்பதால் 9, 10, 12ஆம் திகதிகள் வார விடுமுறைகளுடன் 15ஆம் திகதி தைப்பொங்கல் வருவதன் காரணமாக விடுமுறையில் வீட்டிற்கு செல்லும் பலர் வேலைக்கு திரும்பிவர மாட்டார்கள். இதனால் தமது வியாபாரம் பெரும் பாதிப்பிற்குள்ளாகலாம் என்பதால் விடுமுறை வழங்க மறுப்பதாக தெரிய வருகின்றது.
குறிப்பிட்ட இவ்விடயம் சம்பந்தமாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவை தனது காரியாலயத்தில் கடந்த வெள்ளிக்கிழமை நேரடியாகச் சந்தித்த சௌ மிய இளைஞர் நிதியத்தின் தலைவர் எஸ்.பி.அந்தோனிமுத்து நிலைமைகளை விளக்கியதுடன் உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டார். 1981ஆம் ஆண்டின் 15ஆம் இலக்க ஜனாதிபதி தேர்தல்கள் சட்டத்தின் 110ஆம் பிரிவின் பிரகாரம் தொழில் தருநர்கள் தங்களது தொழிலாளர்களுக்கு விடுமுறை வழங்க வேண்டும் என்று அந்தோனி முத்துவிடம் தெரிவித்த தேர்தல்கள் ஆணையாளர் விடுமுறை வழங்க மறுப்ப வர்கள் சட்ட நடவடிக்கைகளுக்கு முகம் கொடுக்க வேண்டி வரும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதேநேரம் விடுமுறை வழங்க மறுக்கும் தொழில் தருநருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முன்வந்துள்ள சௌமிய இளைஞர் நிதியம் விடுமுறை வழங்க மறுக்கும் தொழில் தருநர்கள் சம்பந்தமாக தம்முடன் தொடர்பு கொள்ளுமாறு நிதியத் தின் தலைவர் எஸ்.பி.அந்தோனிமுத்து கேட்டுள்ளார். தகவல் தர வேண்டியவர்கள் 0773059167 தொலைபேசி இலக்கம் மற்றும் amuthu19@yahoo.com (link sends e-mail) ஈமெயில் ஊடாக தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுள்ளார்.
வாக்களிப்பதற்கு விடுமுறை வழங்க மறுக்கும் தொழில்தருநர்கள் மீது சட்ட நடவடிக்கை
Reviewed by NEWMANNAR
on
January 06, 2015
Rating:
Reviewed by NEWMANNAR
on
January 06, 2015
Rating:


No comments:
Post a Comment