இரண்டாவது வாரமாகத் தொடரும் எயார் ஏசியா விமானத்தின் சிதைவுகளை தேடும் பணி- Photos
கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை 162 பயணிகளுடன் இந்தனோசியாவின் சுரபயா விமான நிலையத்தில் இருந்து சிங்கபூருக்கு புறப்பட்ட எயார் ஏசியா விமானம் கடலில் விழுந்து விபத்துக்கு உள்ளானது.
கடலில் விழுந்த எயார் ஏசியா விமானத்தினை தேடும் பணிகள் இரண்டாவது வாரமாக இடம்பெற்று வருகின்றது.
இதுவரை 34 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. விமானத்தின் பாகங்கள் என சந்தேகிக்கப்படும் 4 பெரிய பொருட்கள் ஜாவாக் கடல் பகுதியில் மிதப்பது கண்டறியப்பட்டுள்ளது. எனினும் மோசமான காலநிலை காரணமாக இங்கு செல்வதில் தடங்கல் ஏற்பட்டுள்ளது.
எது எவ்வாறாக இருந்தாலும் விமானத்தினை தேடும் பணியில் சுமார் 29 கப்பல்கள், 17 விமானங்கள் , மற்றும் ஹெலிகொப்டர்கள் ஈடுபட்டு வருகின்றன.
இரண்டாவது வாரமாகத் தொடரும் எயார் ஏசியா விமானத்தின் சிதைவுகளை தேடும் பணி- Photos
Reviewed by NEWMANNAR
on
January 05, 2015
Rating:
Reviewed by NEWMANNAR
on
January 05, 2015
Rating:







No comments:
Post a Comment