அண்மைய செய்திகள்

recent
-

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் மன்னார் விஜயத்திற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி-மன்னார் மாவட்ட செயலாளர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய.



இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் மன்னார் விஜயத்திற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தியாகியுள்ளதாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய தெரிவித்தார்.

இந்திய பிரதமரின் மன்னார் விஜயம் குறித்து மாவட்ட அரசாங்க அதிபர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,,,,

இலங்கை வருகை தரும் இந்திய பிரதமர் எதிர்வரும் 14 ஆம் திகதி சனிக்கிழமை காலை 11 மணிக்கு தலைமன்னார் துறை புகையிரத நிலையத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

தலைமன்னார் துறை புகையிரத நிலையத்தில் இருந்து கொழும்புக்கான புகையிரத சேவையை ஆரம்பித்து வைப்பார்.அது மட்டுமின்றி தலைமன்னாரில் இருந்து இராமேஸ்வரத்திற்கான படகு சேவை ஆரம்பிப்பது குறித்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

எனவே இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் மன்னார் விஜயத்திற்கான சகல அடிப்படை வசதிகளும் பூர்த்தியடைந்துள்ளது.

பொலிஸ் அதிகாரிகள்,பாதுகாப்பு படையினர்,அரசியல்வாதிகள்,உயர் அதிகாரிகளுடன் இவ்விடையம் தொடர்பாக ஏற்கனவே கலந்துரையாடப்பட்டுள்ளதாகவும் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய மேலும் தெரிவித்தார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் மன்னார் விஜயத்திற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி-மன்னார் மாவட்ட செயலாளர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய. Reviewed by NEWMANNAR on March 12, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.