தலைமன்னார் துறை புகையிரத நிலைய பகுதியில் விசேட பாதுகாப்பு நடவடிக்கை.-Photos
இந்திய பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் (14) சனிக்கிழமை தலைமன்னார் பியர் பகுதிக்கு விஜயம் செய்யவுள்ள நிலையில் தலைமன்னார் பகுதில் பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
ஏதிர்வரும் சனிக்கிழமை தலைமன்னார் பியர் பகுதிக்கு வருகை தரும் -இந்திய பிரதமர் நரேந்திர மோடி காலை 11 மணியளவில் தலைமன்னார் துறை புகையிரத நிலையத்தில் இருந்து கொழும்புக்கான புகையிரத சேவையினை ஆரம்பித்து வைப்பார்.
-இந்த நிலையில் இந்திய பிரதமரின் வருகையை முன்னிட்டு பொலிஸரின் பாதுகாப்பு நடவடிக்கைகள் தலைமன்னார் துறை புகையிரத நிலையம் சுற்றிய பகுதிகளின் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
-மன்னார் மாவட்டத்தில் உள்ள பொலிஸ் நிலையங்களில் கடமையாற்றும் பொலிஸார் இன்று (12) வியாழக்கிழமை மாலை விசேட கடமைக்காக தலைமன்னார் பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
தலைமன்னார் துறை புகையிரத நிலைய பகுதியில் விசேட பாதுகாப்பு நடவடிக்கை.-Photos
Reviewed by NEWMANNAR
on
March 12, 2015
Rating:
No comments:
Post a Comment