பள்ளமடு- மகிலங்குளம் பிரதான வீதி 457 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் புனரமைப்பு பணிகள் ஆரம்பிப்பு.-Photos
மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட பள்ளமடு-மகிலங்குளம் பிரதான வீதி புனரமைப்பு பணிகள் நேற்று (19) வியாழக்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
வடக்கு வீதி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் வடமாகாண வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் நிகழ்ச்சி திட்டத்தினூடாக குறித்த வீதி அமைப்பதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
விடத்தல் தீவு,பள்ளமடு சந்தியில் இருந்து-மகிலங்குளம் வரையிலான 12 கிலோ மீற்றர் தூரம் கொண்ட வீதியே புனரமைப்பு செய்யப்படுகின்றது.
ஆசிய அபிவிருத்தி வங்கி வழங்கிய 457 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டின் கீழ் குறித்த வீதி புனரமைக்கப்படவுள்ளது.
நேற்று வெள்ளிக்கிழமை(19) மதியம் இடம் பெற்ற ஆரம்ப நிகழ்வில் பிரதம விருந்தினராக கைத்தொழில் வர்த்தக வாணிப அமைச்சர் றிஸாட் பதியுதீன்,சிறப்பு விருந்தினர்களாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்,வடமாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரன்,கௌரவ விருந்தினராக வடமாகாண சபை உறுப்பினர் றிப்hகான் பதியுதீன் மற்றும் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் சிறிஸ் கந்தராஜா,மாந்தை மேற்கு பிரதேச சபையின் தலைவர் வரப்பிரகாசம் உற்பட பலர் கலந்து கொண்டு குறித்த வீதியின் அபிவிருத்தி நடவடிக்கைகளை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தமை குறிப்பிடத்தக்கது.
பள்ளமடு- மகிலங்குளம் பிரதான வீதி 457 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் புனரமைப்பு பணிகள் ஆரம்பிப்பு.-Photos
Reviewed by NEWMANNAR
on
March 20, 2015
Rating:
No comments:
Post a Comment