முல்லைத்தீவில் உருக்குலைந்த நிலையில் சடலம் கண்டெடுப்பு
முல்லைத்தீவு இரட்டை வாய்க்கால் பகுதியிலுள்ள பற்றைக்காட்டில் இருந்து உருகுலைந்த நிலையில் சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இராணுவத்தினர் வழங்கிய தகவலுக்கு அமைய இந்த சடலம் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும் சடலமாக கண்டெடுக்கப்பட்டவர் ஆணா அல்லது பெண்ணா என்பதை அடையாளம் காண முடியாதுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் கூறுகின்றார்.
பொலிஸ் பாதுகாப்புடன் சடலம் அதே இடத்தில் வைக்கப்பட்டுள்ளதுடன் முல்லைத்தீவு நீதவான் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தவுள்ளார்.
நீதவான் விசாரணைகளை அடுத்து சடலம் முல்லைத்தீவு வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
முல்லைத்தீவில் உருக்குலைந்த நிலையில் சடலம் கண்டெடுப்பு
Reviewed by NEWMANNAR
on
April 23, 2015
Rating:

No comments:
Post a Comment