அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் காட்டாஸ்பத்திரி சிறி முத்துமாரியம்மன் அறநெறிப்பாடசாலை கட்டிடம் திறந்து வைப்பு.



மன்னார் காட்டாஸ்பத்திரி சிறி முத்துமாரியம்மன் அறநெறிப்பாடசாலை கட்டிடத்திறப்பு விழா இன்று ஞாயிற்றுக்கிழமை(19) காலை மன்னார் மாவட்ட அறநெறிப் பாடசாலைகளின் இணையத்தின் தலைவர் சிவசிறி மஹா தர்மகுமார குரக்கள் தலைமையில் இடம் பெற்றது.

குறித்த நிகழ்விற்கு பிரதம விருந்தினராக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்,சிறப்பு விருந்தினர்களாக மன்னார் பிரதேசச் செயலாளர் கே.எஸ்.வசந்த குமார்,இந்து மஹா சபையின் தலைவர் எஸ்.சி.இராமகிருஸ்னன் மற்றும் மன்னார் மாவட்ட இந்து,முதியோர் நற்பணி மன்றத்தின் தலைவர் பவமொழி பவன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது குறித்த அறநெறிப்பாடசாலை கட்டிடம் விருந்தினர்களினால் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டதோடு மாணவர்களுக்கும்,முன்பள்ளி ஆசிரியர்களுக்கும் பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


















மன்னார் காட்டாஸ்பத்திரி சிறி முத்துமாரியம்மன் அறநெறிப்பாடசாலை கட்டிடம் திறந்து வைப்பு. Reviewed by NEWMANNAR on April 19, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.