அண்மைய செய்திகள்

recent
-

மடு மாதா சுற்றுக்கிண்ணத்திற்கான இறுதிப்போட்டி மடுவில்



மடு மாந்தைமேற்கு உதைபந்தாட்ட லீக்கினால் நடாத்தப்படும் "மடு மாதா சுற்றுக்கிண்ணத்திற்கான உதைபந்தாட்டப் போட்டியின் இறுதிப்போட்டி எதிர்வரும் 2/5/2015 அன்று சனிக்கிழமை மாலை 3.30 மணியளவில் மடு பிரதேச செயலாளர் மைதானத்தில் நடைபெறும்.

இப்போட்டிக்கு மன்னார் ஆயர் மேதகு இராயப்பு யோசப் ஆண்டகை அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதுடன் இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தலைவர் திரு.றஞ்சித் றொட்றிக்கோ, மடு ஆலயப் பரிபாலகர் அருட்பணி எமிலியானுஸ்பிள்ளை, அருட்பணி றஜனிக்காந்த், அருட்சகோதரர் ஸ்ரனிஸ்லோஸ், அருட்சகோதரர் விஐயதாசன், மற்றும் அருட்பணியாளர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், வடமாகாண அமைச்சர் டெனிஸ்வரன், வடமாகாண உறுப்பினர்கள், மாந்தைமேற்கு பிரதேச சபைத்தலைவர் திரு. வரப்பிரகாசம், மடு பிரதேசச் செயலர் திரு.சத்தியசோதி, மாந்தைமேற்கு பிரதேசச் செயலர் திரு. சிறிஸ்கந்தகுமார், மன்னார் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோரும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

அனைவரையும் இறுதிப்போட்டியைக் கண்டுகளிக்குமாறு அன்புடன் வேண்டுகின்றோம்.

தகவல்,

தலைவர்,
மடு மாந்தைமேற்கு உதைபந்தாட்ட லீக்,
Dr.ம.மதுரநாயகம்
மடு மாதா சுற்றுக்கிண்ணத்திற்கான இறுதிப்போட்டி மடுவில் Reviewed by NEWMANNAR on April 26, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.