யாழில் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு
யாழ்ப்பாணம் மூளாய் கொத்தத்துறைப் பகுதியில் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் இளம் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. வட்டுக்கோட்டை மாட்டு வண்டிச் சவாரித் திடலில் இருந்து கொத்தத்துறை இந்து மயாணத்திற்குச் செல்லும் வழியில் மயாணத்திலிருந்து சுமார் 200 மீற்றர் தூரத்திலேயே குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் வட்டுக்கோட்டை தெற்கு இன்பச்சோலையைச் சேர்ந்த பாலசுப்பிரமணியம் யோகேஸ்வரி (வசந்தி) என அடையாளங்காணப்பட்டுள்ளார். சடலம் மீட்கப்பட்ட பகுதி குறித்த பெண்ணின் வீட்டிலிருந்து ஒரு கிலோ மீற்றருக்கும் உட்பட்ட ஆள் நடமாட்டம் குறைந்த காட்டுப் பிரதேசமாகும். மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். இதேவேளை, சடலமாக மீட்கப்பட்ட கணவரான பாலசுப்பிரமணியம் கடந்த 2012ஆம் ஆண்டு வீதிவிபத்தொன்றில் மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
யாழில் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு
Reviewed by Author
on
May 11, 2015
Rating:

No comments:
Post a Comment