இஸ்தான்புல் பகிரங்க டென்னிஸ்: ரோஜர் பெடரர் சம்பியன்
இஸ்தான்புல் பகிரங்க டென்னிஸில் ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் சம்பியன் பட்டம் வென்றார். துருக்கியின் இஸ்தான்புல் நகரில் நடைபெற்ற இந்தப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் பெடரர் 6-3, 7-6 (11) என்ற நேர்செட்களில் உருகுவேயின் பாப்லோ கியு+ வேஸைத் தோற்கடித்தார். 17 கிராண்ட்ஸ்லம் பட்டம் வென்ற வரான பெடரர், இஸ்தான்புல் போட்டியில் வென்றதன் மூலம் ஒட்டுமொத்தத்தில் 85-வது சம்பியன் பட்டத்தைக் கைப்பற்றி யிருக்கிறார். ஒரு மணி நேரம் 36 நிமிடங்கள் நடந்த இந்தப் போட்டியில் மணிக்கட்டில் ஏற்பட்ட காயத்துக்காக இரு முறை சிகிச்சை பெற்ற கியு+ வேஸ், 2-வது செட்டில் கடுமையாகப் போராடினார். இதனால் அந்த செட் டைபிரேக்கர் வரை சென்றது. டைபிரேக்கரிலும் விடாப்பிடியாக போராடிய கியு+வேஸ், 24 ஆட்டங்கள் வரை இழுத்துச் சென்றார். ஆனாலும் அவரால் அந்த செட்டை தக்கவைக்க முடியாமல் போனது. கடைசியாக 2012-ல் களிமண் ஆடுகள த்தில் வென்ற (மட்ரிட் பகிரங்கம்;) பெடரர், அதன்பிறகு இப்போதுதான் களிமண் ஆடுகளத்தில் நடைபெற்ற போட்டியில் வென்றிருக்கிறார். அது குறித்துப் பேசிய பெடரர், நீண்ட நாட்களுக்குப் பிறகு களிமண் ஆடுகளத் தில் நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இந் தப் போட்டி 3-வது செட்டுக்கு தகுதியான போட்டி என நினைக்கிறேன் என்றார்.
இஸ்தான்புல் பகிரங்க டென்னிஸ்: ரோஜர் பெடரர் சம்பியன்
Reviewed by Author
on
May 06, 2015
Rating:
Reviewed by Author
on
May 06, 2015
Rating:


No comments:
Post a Comment