கருங்கண்டல் புளியங்குளம் கிராமத்தில் இலவச கணினி வகுப்புகள் ஆரம்பித்து வைப்பு.-Photos
மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட கருங்கண்டல் புளியங்குளம் கிராமத்தில், இரு கண்களையும் இழந்து புலம்பெயர்ந்து வாழும் முன்னாள் போராளியின் நிதிப்பங்களிப்புடன் இலவச கணினி வகுப்புகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.
எழுத்தாளர், கவிஞருமான செல்வி சந்திரகலா (வெற்றிச்செல்வி) தலைமையில் நேற்று சனிக்கிழமை(23.05.2015) இடம் பெற்ற இலவச கணினி வகுப்புகள் ஆரம்பிக்கும் நிகழ்வில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், முன்னாள் வட-கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மகேந்திரன் ரகு ஆகியோர் கலந்து கொண்டு வகுப்புகளை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தனர்.
கருங்கண்டல் புளியங்குளம் கிராமத்தில் இலவச கணினி வகுப்புகள் ஆரம்பித்து வைப்பு.-Photos
Reviewed by NEWMANNAR
on
May 24, 2015
Rating:

No comments:
Post a Comment