அண்மைய செய்திகள்

recent
-

பலி­யி­டப்­பட்ட பல்­லா­யி­ரக்­க­ணக்­கான மக்­களை நினை­வு­கூ­ருதல் அவ­சியம் : விஜ­ய­க­லா ­ம­கேஸ்­வரன்



இறு­தி­யுத்­தத்தில் கொன்று குவிக்­கப்­பட்ட பல்­லா­யி­ரக்­க­ணக்­கான தமிழ் மக்­களை நினை­வு­கூர்ந்து இன்று நடை­பெறும் முள்­ளி­வாய்க்கால் நினை­வேந்தல் நிகழ்வில் அனைத்துத் தமிழ் மக்­களும் பங்­கேற்று உயி­ரி­ழந்த தமிழ் மக்­களின் ஆன்மா ஈடேற்­றத்­திற்­காக பிரார்த்­திக்­க­வேண்­டி­யது அவ­சி­ய­மா­ன­தாகும் என்று மக­ளிர்­வி­வ­கார பிரதி அமைச்­சரும்இ ஐக்­கிய தேசி­யக்­கட்­சியின் யாழ். மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான திரு­மதி விஜ­ய­கலா மகேஸ்­வரன் தெரி­வித்­துள்ளார்.

 முள்­ளி­வாய்க்கால் நினை­வேந்தல் நிகழ்வை முன்­னிட்டு அவர் விடுத்­துள்ள அறிக்­கை­யி­லேயே இவ்­வாறு தெரி­வித்­துள்ளார். அதில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது:- 2009ஆம் ஆண்டு முற்­ப­கு­தியில் இடம் பெற்ற இறுதி யுத்­தத்­தின்­போது பல்­லா­யி­ரக்­க­ணக்­கான எமது உற­வுகள் கொன்று குவிக்­கப்­பட்­டனர். பெரு­ம­ள­வானோர் அங்­க­வீ­னர்­க­ளா­கவும், காய­ம­டைந்­த­வர்­க­ளா­க வும் மாற்­றப்­பட்­டனர். பெரு­ம­ள­வானோர் காணாமல் போயுள்­ளனர். இவ்­வாறு பேர­வலம் ஏற்­பட்டு இன்­றுடன் 6 வரு­டங்கள் பூர்த்­தி­யா­கி­விட்­டன. இந்த பேர­வ­லத்தில் உயி­ரி­ழந்த எமது ஒவ்­வொரு உற­வையும் நாம் நினை­வு­கூ­ர­வேண்டும். அது எமது தார்­மீக கடமை­யா கும்.

 உயி­ரி­ழந்த அப்­பாவி மக்­க­ளைக்­கூட நினை­வு­கூர முடி­யாத அச்­ச­மான சூழ்­நிலை கடந்த அர­சாங்க காலத்தில் இருந்­தது. உயி­ரி­ ழந்­த­வர்­களை நினை­வு­கூர்ந்தால் அவர்­க­ளை யும் புலிகள் எனக்­கூறி தண்­டிக்கும் காலம் கடந்த ஐந்து வரு­டங்­க­ளாக நிலவி வந்­தது. தற்­போ­தைய அர­சாங்­க­மா­னது உயி­ரி­ழந்த பொது­மக்­களை நினை­வு­கூ­ரலாம் என அனு­மதி வழங்­கி­யுள்­ளமை வர­வேற்­கத்­தக்­க­தாகும். மஹிந்­த­ரா­ஜ­பக் ஷ ஆட்­சிக்­கா­லத்தில் யுத்த வெற்­றி­விழா கொண்­டா­டப்­பட்­டது. தமிழ் மக்கள் கொன்று குவிக்­கப்­பட்டு அவர்­க­ளது உற­வி­னர்கள் துயர் தோய்ந்­தி­ருந்த நிலையில் அந்த மக்­க­ளது மனதை புண்­ப­டுத்தும் வகை­யி­லேயே கடந்த அர­சாங்­க­மா­னது இரா­ணுவக் கவச வாக­னங்­க­ளையும் போர்­வி­மா­னங்­க­ளையும் காட்­சிப்­ப­டுத்தி வெற்­றி­வி­ழாக்­களை கொண்­டா­டி­யி­ருந்­தது. தற்­போ­தைய அர­சாங்­க­மா­னது வெற்­றி­விழா என்ற பெயரில் இத்­த­கைய நிகழ்வை ஏற்­பாடு செய்­யாது பிரி­வி­னைக்கு எதி­ரான நிகழ்ச்­சி­யா­கவே இதற்­கான ஏற்­பா­டு­களை மேற்­கொண்­டுள்­ளது. உண்­மை­யி­லேயே பலி­யி­டப்­பட்ட பல்­லா­யி­ரக்­க­ணக்­கான தமிழ் மக்­களின் உற­வுகள் என்றும் தமது உற­வு­களை எண்ணி கண்ணீர் வடித்­த­ப­டியே சோகத்­துடன் வாழ்­கின்­றன. இந்த மக்­களின் சோகத்தில் நானும் பங்­கேற்­றுக் ­கொள்­கின்றேன். இன்­றயை தினம் வடக்குஇ கிழக்கு உட்­பட தமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் இந்த முள்ளிவாய்க்கால் நினை வேந்தல் நிகழ்வு உணர்வு பூர்வமாக நடத் தப்படவேண்டும். இதற்கு சகல தரப்பினரும் ஒத்துழைப்புக் களை வழங்கவேண்டும். அமைதியான முறையில் பலியான தமது உறவுகளை நினைவேந்தல் செய்வதற்கு சகலருக்குமே உரிமை உள்ளது. இந்த நினைவேந்தலிலும் மக்களின் சோகத்திலும்இ நானும் பங்கேற் றுக்கொள்கின்றேன்.
பலி­யி­டப்­பட்ட பல்­லா­யி­ரக்­க­ணக்­கான மக்­களை நினை­வு­கூ­ருதல் அவ­சியம் : விஜ­ய­க­லா ­ம­கேஸ்­வரன் Reviewed by Author on May 18, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.