அண்மைய செய்திகள்

recent
-

சம்பூர் மீள்­கு­டி­யேற்­றத்தில் இரட்டை வேடம் வேண்டாம் : சுரேஷ் எம்.பி.



சம்பூர் மக்­களை அவர்­க­ளு­டைய சொந்தக் காணி­களில் மீள்­கு­டி­யேற்றும் விடயம் தொடர்­பாக அர­சாங்கம் இரட்டை வேடம் போட­வேண்­டிய அவ­சி­ய­மில்லை என தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பேச்­சா­ளரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான சுரேஷ்­பி­ரே­மச்­சந்­திரன் தெரி­வித்­துள்ளார். வர்த்­த­மானி அறி­வித்தல் மற்றும் எமக்கு அளிக்­கப்­பட்ட வாக்­கு­று­தியின் பிர­காரம் அடுத்த ஒரு­வார காலத்­தினுள் அவர்­களை மீள்­கு­டி­யேற்றம் செய்ய வேண்டும்.

 தவ றின் மக்கள் தமது அடிப்­படை உரி­மை­க­ளுக்­காக ஜன­நா­யக போராட்­டத்தில் குதிக்க வேண்­டி­யேற்­படும் எனவும் குறிப்­பிட்டார். வர்த்­த­மானி அறி­வித்தல் வெளி யான பின்­னரும் சம்பூர் மக்­களின் மீள்­கு­டி­யேற்­றத்தில் ஏற்­பட்­டுள்ள தாமதம் குறித்து கருத்து வெளியி­டு­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். அவர்­மே­லும்­தெ­ரி­வித்த­தா­வது, திரு­கோ­ண­மலை மாவட்­டத்தில் சம்பூர் பிர­தே­சத்தில் உள்ள மக்கள் குடி­யி­ருப்பு காணி­களை முன்னாள் ஜனா­தி­பதி மகிந்­த­ ரா­ஜ­பக் ஷ தலை­மை­யி­லான அர­சாங்கம் முத­லீட்டு ஊக்­கு­விப்புச் சபைக்கு வழங்­கி­யி­ருந்­தது. அக்­கா­ணி­களில் ஒரு பகு­தியை மக்­க­ளி­டத்தில் கைய­ளிப்­ப­தற்­கான வர்த்­த­மானி அறி­வித்­தலில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன கடந்த எட்டாம் திகதி கைச்­சாத்­திட்­டி­ருந்தார். 

அதன் பிர­காரம் 207 குடும்பங்­களை முதற்­கட்­ட­மாக குடி­யேற்­று­வ­தெ­னவும் தொடர்ந்து கடற்­படை பயிற்சி முகாம் அமைந்­துள்ள 224 மக்கள் குடி­யி­ருப்பு காணி­களை ஐந்து மாத காலத்­தினுள் விடு­விப்­ப­தா­கவும் அர­சாங்­கத்தால் அறி­விக்­கப்­பட்­டி­ருந்­தது. அவ்­வா­றான நிலையில் முத­லீட்டு ஊக்­கு­விப்புச் சபையின் ஊடாக சம்பூர் பிர­தே­சத்தில் தமது முத­லீ­டு­களை மேற்­கொள்­வ­தற்­காக முன்­வந்­தி­ருந்த தனியார் நிறு­வ­ன­மொன்று தற்­போது அந்­நி­லங்­களை தமக்கு சொந்­த­மெ­னக்­கூறி மக்கள் குடி­யேற்­று­வதை தடுக்கும் வகையில் நீதி­மன்ற தற்­கா­லிக தடை­ யுத்­த­ரவொன்றை பெற்­றி­ருக்­கின்றது. ஒரு நாட்டின் அர­சாங்கம் வர்த்­த­மானி அறி­வித்­தலைச் செய்த பின்னர் அதனை எவ்­வாறு தடுத்து நிறுத்த முடியும் என்­பது இங்கு பெரும் கேள்­விக்­கு­றி­யாக இருக்­கின்­றது. ஒரு பக்­கத்தில் எம்­மி­டமும்இ சர்­வ­தே­சத்­தி­டமும் தமிழ் மக்­களின் மீள்­கு­டி­யேற்­றத்தை நாம் விரை­வாக செய்து வரு­கின்றோம் எனத் தொடர்ச்­சி­யாக கூறிக்­கொண்­ டி­ருக்கும் அர­சாங்கம் மறு­பக்­கத் தில் காணி­களை விடு­விக்கும் அறி­வித்­தலை வழங்­கி­விட்டு பின்னர் அதனை தடுக்கும் வகை­யி­லான செயற்­பா­டு­க­ளையும் முன்­னெ­டுக்­கின்­றது.

 புதிய ஜனா­தி­பதி தலை­மை­யி­லான அர­சாங்கம் அறி­வித்­தி­ருந்த நூறுநாள் வேலைத்­திட்­டத்தில் அளிக்­கப்­பட்ட வாக்­கு­று­தி­க­ளின்படி சம்பூர் காணிகள் விடு­விக்­கப்­பட்­டி­ருக்க வேண்டும். எனினும் தற்­போதுவரையில் அக்­கா­ணிகள் மக்­க­ ளிடம் கைய­ளிக்­கப்­ப­டாத நிலை­மையே தொடர்­கின்­றது. 2006ஆம் ஆண்டு இடம்­பெயர்ந்து இன்றும் முகாம் வாழ்க்­கையை தொடர்ந்து கொண்­டி­ருக்கும் மக்­களை கருத்தில் கொள்­ளுங்கள். அவர்­க­ளுக்கு அளிக்­கப்­பட்ட வாக்­கு­று­தியின் பிர­காரம் மீளக்­கு­டி­யேற்­றுங்கள். மக்­களின் அடிப்­படை விட­யங்­களில் இரட்டை வேடம் போடுவது பொருத்தமானதல்ல என்றார்.
சம்பூர் மீள்­கு­டி­யேற்­றத்தில் இரட்டை வேடம் வேண்டாம் : சுரேஷ் எம்.பி. Reviewed by Author on May 18, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.