அண்மைய செய்திகள்

recent
-

புங்­கு­டு­தீவு மாண­வியை படுகொலை செய்தவர்களுக்கு தகுந்த தண்டனை வழங்கப்பட வேண்டும் : மலை­யகக் கல்வி அபி­வி­ருத்தி மன்றம் கண்­டனம்


புங்­கு­டு­தீவு மாணவி வித்­தி­யாவை பாலியல் வல்­லு­ற­வுக்­குள்­ளாக்கி கொலை செய்த குற்­ற­வா­ளி­க­ளுக்கு நீதி­மன்றம் தகுந்த தண்­டனை வழங்கி இவர்­களைப் போன்ற சமூக விரோ­தி­க­ளுக்கு பாடத்தைப் புகட்ட வேண்டும் என மலை­யகக் கல்வி அபி­வி­ருத்தி மன்­றத்தின் தலைவர் கே. சுப்­பி­ர­ம­ணியம் வேண்­டுகோள் விடுத்­துள்ளார். இது தொடர்­பாக அவர் வெளி­யிட்­டுள்ள அறிக்­கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மாணவி வித்­தியா சமூக விரோ­தி­களால் மிரு­கத்­த­ன­மான முறையில் பாலியல் வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்தி கொடூ­ர­மான முறையில் கொலை செய்­யப்­பட்ட சம்­ப­வத்தை மலை­யகக் கல்வி அபி­வி­ருத்தி மன்றம் வன்­மை­யாகக் கண்­டிக்­கின்­றது. மகளை இழந்து தவிக்­கின்ற அவ­ரது பெற்­றோ­ருக்கு வார்த்­தை­களால் ஆறுதல் கூற முடி­யாது என்­றாலும்இ அவர்­களின் வேத­னையில் மலை­யகக் கல்வி அபி­வி­ருத்தி மன்றம் பங்கு கொள்­கின்­றது. இவ்­வா­றான சமூக விரோதச் செய­ற்பாடுகளில் ஈடு­ப­டு­கின்ற கொடி­ய­வர்­க­ளுக்கு தகுந்த பாடத்தைப் புகட்டும் வகையில் நீதி­மன்றம் கடு­மை­யான தண்­ட­னையை வழங்க வேண்டும். யுத்­தத்தின் கோரப் பிடி­யி­லி­ருந்து விலகி மக்கள் இயல்பு வாழ்க்­கைக்குத் திரும்பிக் கொண்­டி­ருக்கும் போது, இத்­த­கைய கொடூரச் செயல்கள் மக்­களை மேலும் துய­ரத்தில் தள்ளி விடு­கின்­றது. கொலை செய்­யப்­பட்ட மாண­வியின் சார்பில் வட மாகா­ணத்தைச் சேர்ந்த சட்­டத்­த­ர­ணி­களும் ஓய்வு பெற்ற நீதி­ப­தி­களும் இல­வ­ச­மாக வாதாட முன்­வந்­தி­ருப்­பது சமூ­கத்தின் மீது அவர்கள் கொண்­டுள்ள அபி­மா­னத்தை எடுத்துக் காட்­டு­கின்­றது. குற்­ற­வா­ளி­க­ளுக்கு ஆகக் கூடுதலான தண்டனையைப் பெற்றுக் கொடுத்து சமூகத்தில் குற்றச் செயல்கள் பெருகாமல் இருக்க வழிகாட்ட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
புங்­கு­டு­தீவு மாண­வியை படுகொலை செய்தவர்களுக்கு தகுந்த தண்டனை வழங்கப்பட வேண்டும் : மலை­யகக் கல்வி அபி­வி­ருத்தி மன்றம் கண்­டனம் Reviewed by Author on May 22, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.