அண்மைய செய்திகள்

recent
-

சொந்­த­மண்­ணுக்கு திரும்­பினர் சம்பூர் மக்கள்; ஆனந்­தக்­கண்ணீர் மல்க காலடி பதித்­தனர்


ஒன்­பது ஆண்­டு­கா­லத்­திற்கு பின்னர் சம்பூர் மக்கள் தமது சொந்த மண்­ணுக்கு திரும்­பி­யுள்­ளனர். மூதூர் பிர­தேச செய­லாளர் பிரி­வி­லுள்ள கட்­டை­ப­றிச் சான், மணல் சேனை, கிளி­வெட்டி, பட்­டித்­திடல் ஆகிய இடைத்­தங்கல் முகாம்­களில் தங்­கி­யி­ருந்த சம்பூர் மக்கள் அனைவரும் நேற்றுக் காலை தமது சொந்த ஊரான சம்­பூ­ருக்கு சென்­றனர். மீண்டும் தமது சொந்த ஊரில் காலடி பதித்­த­வர்கள் ஆனந்த கண்ணீர் மல்­கினர். இம்­மக்கள் சம்பூர் பிர­தே­சத்­திற்கு திரும்­பிய சற்று நேரத்தில் அவ்­வி­டத்­திற்கு விரைந்த பொலிஸார் அவர்­களை அவ்­வி­டத்­தி­லி­ருந்து அகன்று செல்­லு­மாறு பணித்­தனர். அதன் போது நீதிமன்­றத்தின் அறி­விப்பை பொது­மக்கள் தரப்­பினர் சுட்­டிக்­காட்­டிய போதும் தமக்கு உத்­தி­யோக பூர்­வ­மாக எவ்­வி­த­மான அறி­விப்பும் கிடை க்­க­வில்லை. அதன் பின்­னரே உங்­களை இங்கு பிர­வே­சிப் ­ப­தற்கு அனு­ம­தி­ய­ளிக்க முடியும் என பொலிஸார் குறிப்­பிட்­டனர். இருந்­த­போதும் பத்­தி­ரிகை செய்­தியை பொலி­ஸா­ருக்கு காண்­பித்த பொது­மக்கள் வாக்­கு­வாதத்தில் ஈடு­பட்­டனர். சிறிது நேர வாக்­கு­வாதத்தின் பின்னர் திரு­மலை மாவட்ட அர­சாங்க அதி­பரை தொடர்பு கொண்ட பொலிஸார் இவ்­வி­ட­யத்தை தெரி­வித்­த­போது நீதி­மன்ற அறி­விப்பை அவர் சுட்­டிக்­காட்­டி­ய­தோடு பொது­மக்கள் தரப்பில் எந்­த­வி­த­மான தவ­று­க­ளு­மில்லை எனவும் கூறப்­பட்­டது. அதனைத் தொடர்ந்து பொலிஸார் அவ்­வி­டத்தை விட்டு அகன்று சென்­றுள்­ளனர். மீண்டும் தமது சொந்தக் காணி­க­ளுக்கு திரும்­பி­யமை தொடர்­பாக கிளி­வெட்டி இடைத்­தங்கல் முகாமின் தலைவர் சோம­சுந்­தரம் சண்­மு­கநாதன் தெரி­விக்­கையில், நேற்­றுக்­காலை நாம் அனை­வரும் ஒன்­று­பட்டு மீண் டும் எமது சொந்த மண்­ணுக்கு திரும்­பினோம். அதன்­போது பொலிஸார் எமக்கு இடை­யூறு அளித்­தனர். அதன் ­போது எமது பக்­க­முள்ள நியா­யங்­க­ளையும் நீதி­மன்­றத் தின் அறி­விப்பைக் கொண்ட பத்­தி­ரிகை செய்­தி­யையும் அவர்­க­ளி­டத்தில் காட்­டி­யி­ருந்தோம். அவர்கள் அதனை ஏற்க மறுத்­த­துடன் எம்மை அகன்று செல்­லு­மாறு கூறி னர். இதனால் அவர்­க­ளுக்கும் எங்­க­ளு­க்குமி­டையில் சிறு­வாக்­கு­வாதம் ஏற்­பட்­டது. அதன் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்தனிடம் நாம் தொலை­பே­சி­யூ­டாக தொடர்பு கொண்டு நிலை­மையை கூறி­ய­போது பொலி­ஸா­ரிடம் தொலை­பே­சியை கைய­ளிக்­கு­மாறு கோரினார். இருந்­த­போதும் இங்கு வருகை தந்­தி­ருந்த பொலிஸார் அவ­ருடன் உரை­யாட மறுத்­து­விட்­டனர். இந்­நி­லையில் அர­சாங்க அதி­பரை தொடர்பு கொண்ட பொலிஸார் நாம் சட்­ட­வி­ரோதமாக வந்­தி­ருப்­ப­தாக குறிப்­பிட்­டனர். அதன்­போது அர­சாங்க அதிபர் அனை த்து விட­யங்களையும் எடுத்துக் கூறினார். அதன்­பின்னர் பொலிஸார் இவ்­வி­டத்­தி­லி­ருந்து விலகிச் சென்­றனர். அதனைத் தொடர்ந்து கட்­டாந்­த­ரை­க­ளாக மாற்­றப்­பட்­டுள்ள எங்­க­ளு­டைய பூமியில் எமது காணி­களின் அடை­யா­ளங்­க­ளையும் எல்­லை­க­ளையும் கண்­ட­றியும் செயற்­பா­டு­களை மேற்­கொண்டோம். அத்­துடன் இங்கு சிறி­தா­க­வுள்ள பற்­றை­களை வெட்டி அகற்றி துப்பு­ரவு செய்யும் பணி­களை ஆரம்­பித்­துள்ளோம். எமது காணிகள் அடுத்­த­வா­ர­ம­ளவில் உத்­தி­யோ­க­பூர்­வ­மாக கைய­ளிக்­கப்­படும் என உறு­தி­மொ­ழிகள் வழங்­கப்­பட்­டி­ருக்­கின்ற நிலையில் தற்­போ­தைக்கு நாம் அனைத்­தையும் துப்பு­ர­வு­செய்யும் எல்­லை­களை அமைக்கும் பணி­க­ளையே மேற்­கொள்­ள­வி­ருக்­கின்றோம். உத்­தி­யோக பூர்­வ­மாக காணி­களை அளித்த பின்னர் மீண்டும் எமது குடி­சை­களை அமைக்கும் பணி­களை மேற்­கொள் வோம் என்றார். முன்­ன­தாக 2006ஆம் ஆண்டு ஏற்­பட்ட அசா­த­ாரண சூழ்­நி­லை­மைகளால் சம்பூர் பிர­தே­சத்­தி­லி­ருந்து வெளி­யே­றிய மக்­களில் 1345 குடும்­பங்கள் மூதூர் பிர­தே­சத்­தி­லுள்ள கட்­டை­ப­றிச்­சான (368குடும்­பங்கள்)இ மணல் சேனை (80குடும்­பங்கள்)இ கிளி­வெட்டி(157குடும்­பங் கள்)இ பட்­டித்­திடல் (108குடும்­பங்கள்) என நான்கு இடைத்­தங்கல் முகாம்­களில் தங்­க­வைக்­கப்­பட்­டனர். சுமார் ஒன்­பது வரு­டங்­க­ளாக அடிப்­ப­டை­வ­ச­தி­க­ளற்ற நிலையில் சிறிய ஓலைக்­கு­டி­சை­க­ளிலும்இ தக­ரக்­கொட்­டில்­க­ளிலும் சொல்­லெண்­ணாத்­து­ய­ரத்தை அனு­ப­வித்து வந்­தனர். ஆட்சி மாற்றம் ஏற்­பட்­டதைத் தொடர்ந்து இம்­ம­க்க­ளி­ட­மி­ருந்து சுவீ­க­ரி­கப்­பட்டு முத­லீட்டு ஊக்­கு­விப்பு சபைக்கு வழங்­கப்­பட்­டி­ருந்த காணி­களை மீண்டும் மக்­க­ளி­டத்தில் கையளிப்­பதை அடிப்­ப­டை­யாகக் கொண்டு முதற்­கட்­ட­மாக 818 ஏக்கர் காணி­களை விடு­விப்­ப­தற்­கான வர்த்­த­மானி அறி­வித்­தலை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன கடந்த 7ஆம் திகதி விடுத்­தி­ருந்தார். எனினும் உச்ச நீதி­மன்­றத்தில் தனியார் நிறு­வ­ன­மொன்று மீள்­கு­டி­யேற்­றத்தை தடை­செய்ய வேண்டும் என வழக்கு தாக்கல் செய்­த­மையால் கடந்த வியா­ழக்­கி­ழமை வரையில் இடைக்­கால தடை­யுத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டி­ருந்­தது. இதனால் இடைத்­தங்கல் முகாம்­களில் தங்க வைக்­கப்­பட்­டி­ருந்த சம்பூர் பிர­தேச வாசி­யான தேவ­ராஜா பிரேம்­குமார் சாகும்­வ­ரை­யி­லான உண்­ணா­­விரதப் போராட்­டத்தை கடந்த 18ஆம் திகதி முதல் ஆரம்­பித்­திருந்­த­துடன் அவ­ருக்கு ஆத­ர­வாக இடைத்­தங்கல் முகாம் மக்­களும் உண்­ணா­வி­ரத போராட்­டங்­களை முன்னெ­டுத்­தனர். இந்­நி­லையில் நேற்று முன்தினம் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது மக்கள் மீள்குடியேறுவதற்கான இடைக்கால தடையுத்தரவை நீக்குவதாக உயர் நீதிமன்ற பிரம நீதியரசர் ஸ்ரீபவன் தலைமையிலான மூவரடங்கிய நீதியரசர் குழாம் அறி வித்தது.
சொந்­த­மண்­ணுக்கு திரும்­பினர் சம்பூர் மக்கள்; ஆனந்­தக்­கண்ணீர் மல்க காலடி பதித்­தனர் Reviewed by Author on May 22, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.