அண்மைய செய்திகள்

recent
-

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பில் விசாரணை நடாத்துமாறு கோரிக்கை!


கொழும்பில் சுட்டுக் கொல்லப்பட்ட ஊடகவியலாளர் தர்மரெட்னம் சிவராம் மற்றும் மட்டக்களப்பில் சுட்டுக் கொல்லப்பட்ட ஊடகவியலாளர் நடேசன் ஆகியோரின் கொலைகள் தொடர்பில் அரசாங்கம் உரிய விசாரணைகள் மேற்கொள்ள வேண்டும் என மட்டு. மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பில் இன்று மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

ஊடகவியலாளர் படுகொலை செய்யப்பட்டு 10 ஆண்டுகள் கடந்துவிட்டன. அதேபோன்று மற்றுமொரு ஊடகவியலாளர் நடேசன் அவர்களும் படுகொலை செய்யப்பட்டு பத்து ஆண்டுகள் கடந்துவிட்டன.

இந்த ஊடகவியலாளர்கள் படுகொலை தொடர்பில் இதுவரையில் பூர்வாங்க விசாரணைகள் எதுவும் முன்னெடுக்கப்பட்டதாகவும் தெரியவில்லை. இந்த இரு ஊடகவியலாளர்களும் பாதுகாப்பு நிறைந்த பகுதியில் வைத்து கொலை செய்யப்பட்டுள்ளனர்.

புதிய அரசாங்கம் ஊடக சுதந்திரத்தினை பாதுகாப்பதாக கூறிக்கொண்டிருந்தாலும் கடந்த காலத்தில் ஊடகவியலாளர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் தொடர்பிலும் முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்படவேண்டும்.

வடகிழக்கு மாகாணத்தில் கடந்த காலத்தில் ஊடகவியலாளர்களுக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்கள் காரணமாக பலர் இந்த நாட்டினை விட்டு வெளியேறிச் செல்லும் சூழல் ஏற்பட்டது.அதிலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு அச்சுறுத்தல்கள் காரணமாக அதிகளவான ஊடகவியலாளர்கள் வெளியேறிச் சென்றனர்.

அவ்வாறு வெளியேறிச் சென்ற ஊடகவியலாளர்கள் மீண்டும் நாடு திரும்புவதற்கான எந்தவிதமான நடவடிக்கையினையும் புதிய அரசாங்கம் மேற்கொள்ளவில்லையென்பதும் கவலைக்குரியதாகவே உள்ளது.

வெளியேறிச் சென்ற ஊடகவியலாளர்கள் இந்த நாட்டுக்கு திரும்பி வரும் சூழ்நிலையேற்பட வேண்டுமானால் இங்கு ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டது மற்றும் அச்சுறுத்தல் செய்யப்பட்டது தொடர்பில் பூரண விசாரணை நடாத்தப்பட வேண்டும். அதற்கான நடவடிக்கையினை முன்னெடுப்பதற்கு எமது பாராளுமன்ற உறுப்பினர்களும் புதிய அரசாங்கத்துக்கு அழுத்தங்களை மேற்கொள்ளவேண்டும்.

இதேபோன்று ஊடகவியலாளர் சுகிர்தகுமார் திருகோணமலையில் அதியுயர் பாதுகாப்பு வலயத்தில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டார்.

எனவே தமிழ் ஊடகவியலாளர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட படுகொலைகள் மற்றும் உயர் அச்சுறுத்தல்கள் தொடர்பில் பூரண விசாரணை நடாத்தப்படவேண்டும் என்று ஊடகவியலாளர் த.சிவராம் நினைவு கூரப்படும் இந்த வேளையில் அரசாங்கத்தினை மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் கோரிநிற்கின்றது.
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பில் விசாரணை நடாத்துமாறு கோரிக்கை! Reviewed by NEWMANNAR on May 01, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.