அண்மைய செய்திகள்

recent
-

புங்குடுதீவு மாணவி வன்புணர்வுச் சம்பவம்; மேலும் ஐவர் கைது


யாழ். புங்குடுதீவு பகுதியில் பாடசாலை மாணவி வித்தியா வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு, கொலைசெய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் ஐந்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் நேற்று மாலை குறிகட்டுவான் பகுதியில் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.

கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களை இன்று ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

புங்குடுதீவு பகுதியில் கடந்த புதன்கிழமை பாடசாலைக்கு சென்றிருந்த நிலையில், காணாமற்போன உயர்தர வகுப்பு மாணவி வித்தியா, மறுநாள் பாழடைந்த காணியிலிருந்து சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

குறித்த மாணவி ஒன்றுக்கு மேற்பட்டவர்களால் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டிருந்தமை மருத்துவ பரிசோதனைகளின் மூலம் கண்டறியப்பட்டது.

இதனையடுத்து, அதே பகுதியைச் சேர்ந்த மூன்று சந்தேகநபர்கள் கடந்த வெள்ளிக்கிழமை கைதுசெய்யப்பட்டதுடன், அவர்கள் எதிர்வரும் 28 ஆம்
புங்குடுதீவு மாணவி வன்புணர்வுச் சம்பவம்; மேலும் ஐவர் கைது Reviewed by NEWMANNAR on May 18, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.