அண்மைய செய்திகள்

recent
-

அணிக்குள் சூழ்ச்சி நடக்கிறதா? : மறுக்கிறார் மகளிர் கிரிக்கெட் அணி பயிற்சியாளர்


மக­ளிர்­ கி­ரிக்கெட் அணி வீராங்­ க­னைகள் வேண்­டு­மென்றே பிடி­களைத் தவ­ற­வி­டு­கி­றார்கள் என்றும் அணிக்­குள்ளே ஒற்­று­மை­யில்லை என்றும் சூழ்ச்சி நடப்­ப­தா­கவும் சொல்­லப்­ப­டு­கி­றது. ஆனால் இது ஒன்­றுமே உண்­மை­யில்லை. வெறும் வதந்­தி­கள்தான் என்று தெரி­வித்தார் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் பயிற்­சி­யாளர் ஜீவந்த. மேற்­கிந்­தியத் தீவுகள் மகளிர் அணி இலங்­கைக்கு சுற்­றுப்­ப­யணம் மேற்­கொண்டு விளை­யா­டுகின்றது. இதன் ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்­பின்­போது, இலங்கைப் மகளிர் அணியின் பயிற்­சி­யாளர் ஜீவந்­த­விடம் கேட்­கப்­பட்ட கேள்­விக்கு பதி­ல­ளிக்­கும்­போதே அவர் இதனைக் குறிப்­பிட்டார். அங்கு அவர் மேலும் பேசு­கையில், கடந்த மூன்று போட்­டி­களில் நமது அணி 18 பிடி­களைத் தவ­ற­விட்­டி­ருக்­கி­றது. அதை வைத்­துக்­கொண்­டுதான் அணியில் சூழ்ச்சி நடப்­ப­தா­கவும்இ வீராங்­க­னைகள் களத்­த­டுப்­பின்­போது வேண்­டு­மென்றே பிடி­களைத் தவ­ற­வி­டு­வ­தா­கவும் கூறப்­ப­டு­கி­றது. இது முற்­றிலும் தவ­றான ஒரு கருத்து. இதைநான் மறுக்­கிறேன். பிடி­யெ­டுப்­புகள் தவ­ற­வி­டப்­பட்­டமை உண்­மைதான். ஆனால் அத­ற்கு வேறு காரணம் உண்டு. குறிப்­பாக அந்தப் போட்­டி­க­ளின்­போது பயன்­ப­டுத்­தி­யது வெள்ளை நிற பந்து. அந்­த­மா­தி­ரி­யான சந்­தர்ப்­பத்தில் மேலே அடிக்­கப்­படும் பந்து களத்­த­டுப்பில் ஈடுபடுபவர்களுக்கு தெளிவாகத் தெரி­யாது. அதனால் பிடி­யெ­டுப்­புகள் தவ­ற­வி­டப்­ப­டு­கின்­றன என்றார். மேற்­கிந்­தியத் தீவுகள் மற் றும் இலங்கை அணி­க­ளுக்­கி­டையில் நடை­பெ­று­கின்­ற இந்த போட்­டி­பற்றி குறிப்­பிட்ட ஜீவந்த, எமது அணி முழுத் தகு­தி­யு­டன்தான் காணப்­ப­டு­கி­றது. அதனால் சிறந்­த­தொரு போட்­டியை நாம் நிச்­ச­ய­மாக எதிர்­பார்க்­கலாம். அதே­நேரம் கடந்த மூன்று மாதங்­க­ளுக்கு அதி­க­மாக நாம் பயிற்­சி­களை மேற்­கொண்­டுள்ளோம். அதன்­ப­ய­னாக சிறந்­த­தொரு பெறுப்­பேற்றை இந்­தப்­போட்டித் தொடரில் நாம் பெற்­றுக்­கொள்ள முடி யும் என்றும் அவர் தெரி­வித்தார். மகளிர் கிரிக்­கெட்டில் உள்ள பிரச்­சி­னைகள் குறித்து அவ­ரிடம் கேட்­ட­போதுஇ மகளிர் கிரிக்­கெட்டில் முக்­கி­ய­மான பிரச்­சி­னை­யாகப் பார்க் ­கப்­ப­டு­வது என்­ன­வெனில், பெண்கள் சிறு வய­தி­லி­ருந்து கிரிக்கெட் விளை­யா­டு­வ­தில்லை. அவர்கள் இடை­யில்­வந்­துதான் கிரிக்கெட் அணியில் இணை­கி­றார்கள். அது மிகப்­பெ­ரி­ய­தொரு சவாலாக அமைந்துள்ளது என்றார்.
அணிக்குள் சூழ்ச்சி நடக்கிறதா? : மறுக்கிறார் மகளிர் கிரிக்கெட் அணி பயிற்சியாளர் Reviewed by Author on May 14, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.