அணிக்குள் சூழ்ச்சி நடக்கிறதா? : மறுக்கிறார் மகளிர் கிரிக்கெட் அணி பயிற்சியாளர்
மகளிர் கிரிக்கெட் அணி வீராங் கனைகள் வேண்டுமென்றே பிடிகளைத் தவறவிடுகிறார்கள் என்றும் அணிக்குள்ளே ஒற்றுமையில்லை என்றும் சூழ்ச்சி நடப்பதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால் இது ஒன்றுமே உண்மையில்லை. வெறும் வதந்திகள்தான் என்று தெரிவித்தார் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ஜீவந்த. மேற்கிந்தியத் தீவுகள் மகளிர் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடுகின்றது. இதன் ஊடகவியலாளர் சந்திப்பின்போது, இலங்கைப் மகளிர் அணியின் பயிற்சியாளர் ஜீவந்தவிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் பேசுகையில், கடந்த மூன்று போட்டிகளில் நமது அணி 18 பிடிகளைத் தவறவிட்டிருக்கிறது. அதை வைத்துக்கொண்டுதான் அணியில் சூழ்ச்சி நடப்பதாகவும்இ வீராங்கனைகள் களத்தடுப்பின்போது வேண்டுமென்றே பிடிகளைத் தவறவிடுவதாகவும் கூறப்படுகிறது. இது முற்றிலும் தவறான ஒரு கருத்து. இதைநான் மறுக்கிறேன். பிடியெடுப்புகள் தவறவிடப்பட்டமை உண்மைதான். ஆனால் அதற்கு வேறு காரணம் உண்டு. குறிப்பாக அந்தப் போட்டிகளின்போது பயன்படுத்தியது வெள்ளை நிற பந்து. அந்தமாதிரியான சந்தர்ப்பத்தில் மேலே அடிக்கப்படும் பந்து களத்தடுப்பில் ஈடுபடுபவர்களுக்கு தெளிவாகத் தெரியாது. அதனால் பிடியெடுப்புகள் தவறவிடப்படுகின்றன என்றார். மேற்கிந்தியத் தீவுகள் மற் றும் இலங்கை அணிகளுக்கிடையில் நடைபெறுகின்ற இந்த போட்டிபற்றி குறிப்பிட்ட ஜீவந்த, எமது அணி முழுத் தகுதியுடன்தான் காணப்படுகிறது. அதனால் சிறந்ததொரு போட்டியை நாம் நிச்சயமாக எதிர்பார்க்கலாம். அதேநேரம் கடந்த மூன்று மாதங்களுக்கு அதிகமாக நாம் பயிற்சிகளை மேற்கொண்டுள்ளோம். அதன்பயனாக சிறந்ததொரு பெறுப்பேற்றை இந்தப்போட்டித் தொடரில் நாம் பெற்றுக்கொள்ள முடி யும் என்றும் அவர் தெரிவித்தார். மகளிர் கிரிக்கெட்டில் உள்ள பிரச்சினைகள் குறித்து அவரிடம் கேட்டபோதுஇ மகளிர் கிரிக்கெட்டில் முக்கியமான பிரச்சினையாகப் பார்க் கப்படுவது என்னவெனில், பெண்கள் சிறு வயதிலிருந்து கிரிக்கெட் விளையாடுவதில்லை. அவர்கள் இடையில்வந்துதான் கிரிக்கெட் அணியில் இணைகிறார்கள். அது மிகப்பெரியதொரு சவாலாக அமைந்துள்ளது என்றார்.
அணிக்குள் சூழ்ச்சி நடக்கிறதா? : மறுக்கிறார் மகளிர் கிரிக்கெட் அணி பயிற்சியாளர்
Reviewed by Author
on
May 14, 2015
Rating:

No comments:
Post a Comment