விழிப்புலனற்றவர்கள் வாக்களிக்க புதிய முறை அறிமுகம்
விழிப்புலனற்றவர்கள் வாக்களிப்பதற்கு புதிய முறைமை ஒன்றை அறிமுகம் செய்ய உள்ளதாக தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
விழிப்புலனற்றவர்கள் தேர்தல்களின் போது சுயமாக எவரின் உதவியும் இன்றி வாக்களிப்பதற்கு ப்ரேல் முறைமையிலான வாக்களிப்பு முறை அறிமுகம் செய்யப்பட உள்ளது.
விரைவில் இந்த முறைமை இலங்கையில் அறிமுகம் செய்யப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
உலகின் பல நாடுகளில் இந்த முறைமை அமுல்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மாற்றுத் திறனாளிகளின் அடிப்படை உரிமைகளில் ஒன்றான வாக்குரிமையை உரமையை உறுதி செய்யும் முறைமை அறிமுகம் செய்வது குறித்த செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இந்த செய்தியாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது.
விழிப்புலனற்றவர்கள் வாக்களிக்க புதிய முறை அறிமுகம்
Reviewed by NEWMANNAR
on
May 29, 2015
Rating:

No comments:
Post a Comment