அண்மைய செய்திகள்

recent
-

யாழ். நீதிமன்ற வளாகத்துள் இருந்து கைவிரல் மீட்பு


புங்­குடுதீவு பிர­தே­சத்தின் உயர்­தர வகுப்பு மாணவி வித்­தியா, பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்­ப­டுத்­தப்­பட்டு படு­கொலை செய்­யப்­பட்ட சம்­பவத்தை கண்டித்து பிரதேச மக்களால் நேற்று முன்தினம் யாழ்ப்பாணம் நீதிமன்றத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் நேற்று நீதிமன்ற வளாகத்தினுள் இருந்து மனித கைவிரலொன்று மீட்கப்பட்டுள்ளது. குறித்த கைவிரலானது பொலிஸாரால் நீதிமன்ற வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு வேலியில் இருந்தே மீட்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது ஆர்ப்பாட்டக்காரர்கள் நீதிமன்றத்துக்கு கல் எறிந்து பாதுகாப்பு வேலிகளை தூக்கியும் எறிந்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் இப்பகுதியில் பெரும் பதற்ற நிலை ஏற்பட்டதோடு 129 பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று நீதிமன்ற வளாகத்தை சுத்தப்படுத்தும் போது பாதுகாப்பு வேலி ஒன்றில் இருந்த மனித கைவிரல் ஒன்று பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. குறித்த கைவிரலானது ஆர்ப்பாட்டக்காரர்களால் பாதுகாப்பு வேலியை தூக்கி எறியும் போது அவர்களில் ஒருவரினது கைவிரல் குறித்த பாதுகாப்பு வேலியில் சிக்குண்டு அறுந்திருக்கலாம் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
யாழ். நீதிமன்ற வளாகத்துள் இருந்து கைவிரல் மீட்பு Reviewed by Author on May 22, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.