யுத்தத்தில் இறந்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்த முடியும்
யுத்தத்தின் போது இறந்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தத் தடையில்லை. மாறாக, தீவிரவாதிகளுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு மட்டுமே அரசாங்கத்தினால் தடைவிதிக்கப்பட்டுள்ளது என புத்த சாசன மற்றும் உள்ளூ ராட்சி, மாகாண சபைகள் அமைச்சர் கரு ஜெயசூரிய தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், யுத்தத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவது மனிதாபிமான செயலாகும். அதனை அதற்கு அரசாங்கம் ஒரு போதும் தடை விதிக்காது. அதற்கு மாறாக யுத்தத்தின்போது உயிரிழந்த தமது சொந்தங்களை தீவிரவாதிகளாக கொண்டு அஞ்சலி செலுத்துகின்றமைக்கு மட்டுமே அரசாங்கத்தினால் தடை விதிக்கப் பட்டுள்ளது. யுத்தத்தின் போது தமிழர் சிங்களவர் என இரு தரப்பினருக்கும் இழப்புக்கள் நேர்ந்துள்ளன. அதன் வேதனை இரு தரப்பிற்கும் இருப்பதெனபது நியாயமாகும்.அதனால் அவற்றிலிருந்து மீண்டு இரு தரப்பினருக்கும் இடையில் நல்லிணக்கத்தினை ஏற்படுத்திக் கொள்வதனையே நாம் இப்போது செய்ய வேண்டும். யுத்த நிறைவின் பின்னர் பொதுவாக இரு தரப்பினரிடமும் தமது இனத்தவர் உயிரிழிந்தமை தொடர்பில் அவசியமற்ற எண்ணங்கள பலவும் எழுந்துள்ளன. அவையே இன்று எழுகின்ற பிரச்சினைகளுக்கும் காரணங்களாகவும் அமைந்துள்ளன. அவ்வாறான அவசியமற்ற எண்ணப்பாடுகளை நீக்கி நாட்டு மக்களிடையே நல்லிணக்கத்தையும் தேசிய ஐக்கியபாட்டினையும் உறுதிபடுத்த தேவையான நடவடிக்கைகள் எதிரகாலத்தில் முன்னெடுக்கப் படவுள்ளது. விடுதலை புலிகள் இயக்கம் என்பது இன்று உலக நாடுகள் மத்தியில் தீவிரவாத இயக்கமாக அடையாளப் படுத்தப் பட்டுள்ளது.இந்தியா உள்ளிட்ட நாடுகள் பலவும் அதனை ஏற்றுக் கொண்டுள்ளன. ஆகவே அவர்களை விடுதலை போராளிகள் என அஞ்சலி செலுத்துவது மீண்டும் இன முரண்பாடுகளை தோற்றவிக்க கூடு்ம் என்பதனால் அவ்வாறான செயற்பாடுகளை மக்கள் கைவிடுவது சிறந்ததாக அமையும் என்றார்.
யுத்தத்தில் இறந்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்த முடியும்
Reviewed by Author
on
May 14, 2015
Rating:
.jpg)
No comments:
Post a Comment