முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் மகா வித்தியாலய மாணவர்கள் ஆர்ப்பாட்டம்-Photos
முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் மகா வித்தியாலய மாணவர்கள் இன்று புதன்கிழமை 11.00 மணியளவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
யாழ். புங்குடுதீவில் உயர்தரம் கற்கும் மாணவி வித்தியாவின் படுகொலைக்கு
காரணமானவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் எனக் கோரியேஒட்டுசுட்டான் மகாவித்தியாலய மாணவர்கள்ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இதன் போது பள்ளி மாணவியை மானபங்கப்படுத்தியவர்கள்
கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். அவர்களுக்கு விடுதலை கிடைக்காதவகையில் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என கலந்துகொண்ட மாணவர்கள் கோஷம்எழுப்பினர்.
இதேவேளை, நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஒட்டுசுட்டான் மகாவித்தியாலய பழைய மாணவர்களும்,இப் பாடசாலை மாணவர்களின் பெற்றோரும் கலந்து
கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.இதன்போது “முத்தென முளைத்த வித்தாம் வித்தியாவை வித்தியாலயம்செல்லும் வழியில்சிதைத்து விட்டாரே. “சிறுவர் உரிமை எங்கே”, “கொலைகாரர்களுக்கு அதிகபட்சதண்டனை வழங்கப்பட வேண்டும்” இதுபோன்ற பல வாசகங்கள் எழுதப்பட்ட சுலோகங்களை
ஏந்தியவாறு மாணவர்கள் காணபட்டனர்.
முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் மகா வித்தியாலய மாணவர்கள் ஆர்ப்பாட்டம்-Photos
Reviewed by NEWMANNAR
on
May 20, 2015
Rating:

No comments:
Post a Comment