அண்மைய செய்திகள்

recent
-

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் மகா வித்தியாலய மாணவர்கள் ஆர்ப்பாட்­டம்-Photos




முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் மகா வித்தியாலய மாணவர்கள் இன்று புதன்கிழமை 11.00 மணியளவில் ஆர்ப்பாட்­டத்தில் ஈடுபட்டனர்.
யாழ். புங்குடுதீவில் உயர்தரம் கற்கும் மாணவி வித்தியாவின் படுகொலைக்கு
காரணமானவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் எனக் கோரியேஒட்டுசுட்டான் மகாவித்தியாலய மாணவர்கள்ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இதன் போது பள்ளி மாணவியை மானபங்கப்படுத்தியவர்கள்
கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். அவர்களுக்கு விடுதலை கிடைக்காதவகையில் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என கலந்துகொண்ட மாணவர்கள் கோஷம்எழுப்பினர். 

இதேவேளை, நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஒட்டுசுட்டான் மகாவித்தியாலய பழைய மாணவர்களும்,இப் பாடசாலை மாணவர்களின் பெற்றோரும் கலந்து
கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.இதன்­போது “முத்­தென முளைத்த வித்தாம் வித்­தி­யாவை வித்­தி­யா­லயம்செல்லும் வழியில்சிதைத்து விட்­டாரே. “சிறுவர் உரிமை எங்கே”, “கொலை­கா­ரர்­க­ளுக்கு அதி­க­பட்சதண்­டனை வழங்­கப்­பட வேண்டும்” இது­போன்ற பல வாச­கங்கள் எழு­தப்­பட்ட சுலோ­கங்­களை
ஏந்­தி­ய­வாறு மாண­வர்கள் காணபட்டனர்.





முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் மகா வித்தியாலய மாணவர்கள் ஆர்ப்பாட்­டம்-Photos Reviewed by NEWMANNAR on May 20, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.