சிறுமி சடலமாக மீட்பு
நோர்வூட் சென்ஜோன் டிலரி மேல்பிரிவு தோட்டத்தில் ஆறுவயது சிறுமியொருவர் நீரில் அடித்து செல்லப்பட்ட நிலையில் கால்வாய் ஒன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். ராஜா அபிஷாந்தினி என்ற சிறுமியே சடலமாக மீட்கப்பட்டதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர். நேற்று கடும் மழை பெய்துகொண்டிருந்த வேளை சிறுமியின் தாய் மாட்டுக்கு புல் அறுக்க சென்றுள்ளார். சிறுமியும் தனது தாயுடன் சென்ற சமயத்தில் தவறி விழுந்தமையினால் நீரில் அடித்து செல்லப்பட்டார். மேற்படி சிறுமி நோர்வூட் சென் ஜோன் டிலரி தமிழ் வித்தியாலயத்தில் தரம் 01இல் கல்வி பயின்று வந்துள்ளார். பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சிறுமி சடலமாக மீட்பு
Reviewed by Author
on
May 06, 2015
Rating:
Reviewed by Author
on
May 06, 2015
Rating:


No comments:
Post a Comment