தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் நெருங்கி செயற்படுவது அவசியமானது: பிரதமர்
நாட்டிற்குள் மீண்டும் டி.எஸ்.சேனாநாயக்க யுகத்தை ஆரம்பிக்க போவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அஸ்கிரிய மாநாயக்கர் கலகம ஸ்ரீ அத்ததஸ்சி தேரருடன் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் இதனை கூறியுள்ளார்.
கட்சி, வர்ண பேதமின்றி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து நாட்டை கட்டியெழுப்ப நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் நெருக்கமாக செயற்படுவது அத்தியவசியமான விடயம் எனவும் மாநாயக்க தேரரிடம் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த சந்திப்பின் போது கருத்து வெளியிட்டுள்ள அஸ்கிரிய மாநாயக்கர், மிக விரைவில் தேர்தல் முறையில் திருத்தங்களை செய்ய வேண்டும் எனவும் விருப்பு வாக்கு முறை தொடர்ந்தும் இருந்தால், புதிய அரசியல் கலாசாரத்தை கட்டியெழுப்ப முடியாது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் நெருங்கி செயற்படுவது அவசியமானது: பிரதமர்
Reviewed by NEWMANNAR
on
May 31, 2015
Rating:

No comments:
Post a Comment