அண்மைய செய்திகள்

recent
-

சிறப்பாக இடம் பெற்ற தலைமன்னார் எழுத்தாளர் எம்.சிவானந்தன் எழுதிய எழுதிய''குறை ஒன்றும் இல்லை''நூழ் வெளியீட்டு விழா.

மன்னார் தலைமன்னாரைச் சேர்ந்த எழுத்தாளர் எம்.சிவானந்தன் (துறையூரான்) எழுதிய ''குறை ஒன்றும் இல்லை''நூல் வெளியீட்டு விழா இன்று(4) திங்கட்கிழமை காலை வெளியீடு செய்யப்பட்டுள்ளது.

மன்னார் தமிழ்ச்சங்கத்தின் தலைவர் அருட்தந்தை தமிழ் நேசன் அடிகளார் தலைமையில் மன்னார் கலையருவி நிலையித்தில் குறித்த வெளியீட்டு நிகழ்வு இடம் பெற்றது.

இதன் போது குறித்த நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக மன்னார் வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.எம்.சியான் கலந்து கொண்டார்.

இதன் போது தலைமையுரையினை அருட்தந்தை தமிழ் நேசன் அடிகளார்,வெளியீட்டுரையினை கவிஞர் மன்னார் அமுதன்,ஆய்வுரையினை நாவலாசிரியர் எஸ்.ஏ.உதயன் ஆகியோர் நிகழ்த்தினர்.

இதனைத் தொடர்ந்து பிரதம விருந்தினர் மன்னார் வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.எம்.சியான் மற்றும்  மன்னார் தமிழ்ச்சங்கத்தின் தலைவர் அருட்தந்தை தமிழ் நேசன் அடிகளார் மற்றும் நூலாசிரியர் எழுத்தாளர் எம்.சிவானந்தன்(துறையூரான்) ஆகியோர் இணைந்து நூல் வெளியீடு செய்து வைத்தனர்.
-இதன் போது எழுத்தாளர்கள்,கல்விமான்கள் என நூற்றுக்கனக்கானவர்கள் கலந்து கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

மேலும் படங்கள் 
http://photos.newmannar.com/2015/05/Mannar-in-M.sivananthan-kurai-onrum.html






சிறப்பாக இடம் பெற்ற தலைமன்னார் எழுத்தாளர் எம்.சிவானந்தன் எழுதிய எழுதிய''குறை ஒன்றும் இல்லை''நூழ் வெளியீட்டு விழா. Reviewed by NEWMANNAR on May 05, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.