பொசன் பூரணை தினத்தை முன்னிட்டு அநுராதபுர பாடசாலைகளுக்கு 5 நாள் விடுமுறை
பொசன் பூரணை தினத்தை முன்னிட்டு இன்று தொடக்கம் எதிர்வரும் 5 ஆம் திகதி வரை அநுராதபுரத்திலுள்ள பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குவதற்கு வடமத்திய மாகாண கல்வி அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.
பொசன் வாரத்தை முன்னிட்டு கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ள பொலிஸாரை தங்கவைப்பதற்காக இந்த பாடசாலைகளை பயன்படுத்தவுள்ளதாக வடத்திய மாகாண வலயக்கல்விப் பணிப்பாளர் நிர்மலா ஏக்கநாயக்க தெரிவித்தார்.
இதேவேளை பொசன் பூரணை தினத்தை முன்னிட்டு அநுராதபுர புனித பூமி பகுதியில் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இரண்டாயிரத்து 300 க்கும் அதிகமான பொலிஸார் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
இந்த காலப்பகுதியில் அநுரதபுர நகரை அண்மித்த பகுதிகளில் மதுபோதையில் வாகனத்தை செலுத்தும் சாரதிகள் கைதுசெய்யப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பொசன் பூரணை தினத்தை முன்னிட்டு அநுராதபுர பாடசாலைகளுக்கு 5 நாள் விடுமுறை
Reviewed by NEWMANNAR
on
June 01, 2015
Rating:

No comments:
Post a Comment