அண்மைய செய்திகள்

recent
-

மஹிந்தவுக்கு வேட்புரிமை வழங்க ஜனாதிபதி இணக்கம்: டீ.பீ.ஏக்கநாயக்க


ஜனாதிபதி மற்றும் முன்னாள் ஜனாதிபதியை இணைக்கும் நோக்கில் நியமிக்கப்பட்ட 06 பேர் கொண்ட குழுவின் அறிக்கை இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கவுள்ளதாக குழுவின் தலைவர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டப்ல்யூ.டீ.செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
எனினும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் வேட்புரிமை வழங்குவதற்கு ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளார் என குறித்த குழுவின் உறுப்பினர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டீ.பீ.ஏக்கநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில் தனிப்பட்ட வேலைக்காக வெளிநாடு சென்றுள்ள சுதந்திரக் கட்சியின் பொது செயலாளர் சுசில் பிரேமஜயந்த இன்று காலை இலங்கை வந்தடைந்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு சுதந்திரக் கட்சயில் வேட்புரிமை வழங்கப்பட வேண்டும் என்ற கருத்து தெரிவிக்கும் போது பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்த இருந்தார் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டீ.பீ.ஏக்கநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.

எப்படியிருப்பினும் சுதந்திர கட்சியின் பொது செயலாளர் சுசில் பிரேமஜயந்தவினால் தனியாக தீர்மானங்கள் எதனையும் மேற்கொள்ள முடியாதென முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

மஹிந்தவுக்கு வேட்புரிமை வழங்க ஜனாதிபதி இணக்கம்: டீ.பீ.ஏக்கநாயக்க Reviewed by Author on June 29, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.