அண்மைய செய்திகள்

recent
-

மன்னார்-உயிலங்குளம் பிரதான வீதியில் இடம் பெற்ற விபத்தில் பாடசாலை அதிபர் படுகாயம்.-Photos



மன்னார்-உயிலங்குளம் பிரதான வீதியில் இன்று செவ்வாய்க்கிழமை காலை இடம் பெற்ற விபத்தில் பாடசாலை அதிபர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

படுகாயமடைந்தவர் மன்னார் இலகடி பிட்டி றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையின் அதிபரான அலெக்ஸ் குயின்டஸ் ஜேரோம் பெனான்டோ(வயது-47) என தெரிய வந்துள்ளது.


குறித்த அதிபர் வங்காலையில் உள்ள தனது வீட்டில் இருந்து பாடசாலைக்குச் செல்வதற்காக மோட்டார் சைக்கிலில் உயிலங்குளம் பிரதான வீதியூடாக சென்று கொண்டிருந்த நிலையில் உயிலங்குளம் நானாட்டான் வீதியை கடக்க முற்பட்ட போது வேகமாக வந்த ஹயஸ் ரக வாகனம் மோதியுள்ளது.

இச்சம்பவம் காலை 7.16 மணியளவில் இடம் பெற்றுள்ளது.
இதன் போது குறித்த அதிபர் துர்க்கி வீசப்பட்டு படுகாயமடைந்த நிலையில் அப்பகுதியில் நின்றவர்களினால் மீட்கப்பட்டு உடனடியாக மன்னார் வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அதிபர் பயணித்த மோட்டார் சைக்கில் கடும் சேதங்களுக்கு உள்ளாகியது.
இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த மன்னார் பொலிஸார் விசாரணை களை மேற்கொண்டதோடு குறித்த ஹயஸ் ரக வாகனத்தின் சாரதியை கைது செய்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளை மன்னார் வீதி போக்குவரத்துப்பிரிவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.






மன்னார்-உயிலங்குளம் பிரதான வீதியில் இடம் பெற்ற விபத்தில் பாடசாலை அதிபர் படுகாயம்.-Photos Reviewed by NEWMANNAR on June 30, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.